பங்குசந்தை வீழ்ச்சி, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திரமோடி ஆய்வு நடத்தினார் என்று மத்திய மந்திரி அருண்ஜெட்லி கூறினார்.
பங்குசந்தையில் புள்ளிகள் வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக பங்குகளின் சந்தை மதிப்பு ஒரேநாளில் ரூ.7 லட்சம் கோடி சரிவடைந்தது. அதே போல அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 66 ரூபாய் 64 காசுகளாக சரிவடைந்தது.
பிரதமர் நரேந்திரமோடி பங்குசந்தை நிலவரம், இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நமது பொருளா தாரத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார். நமது பொருளாதாரம் நிலையாக உள்ளது. ஆனாலும் இன்னும் நிறைய செய்யவேண்டிய தேவை உள்ளது.
ஆனாலும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் உள்ள கொள்கைகளில் மாற்றம் எதுவும் செய்யப்பட வில்லை. அந்தபணிகள் தொடர்ந்து நடைபெறும். உலகளவில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார சிக்கலை இந்தியாவுக்கான ஒருவாய்ப்பாக மாற்றவேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
உலகளவில் வர்த்தகத்தில் இப்படி நிலையற்ற தன்மை ஏற்படுவது இயற்கையானதுதான். அனைத்து உலக சந்தைகளிலும் கடும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இப்போதுள்ள சூழ்நிலையை ஒருவாய்ப்பாக பயன் படுத்திக் கொள்ள முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும். இதுதொடர்பாக தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.