மாணவனின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய பிரதமர்

 போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டுவந்த 3-ம் வகுப்பு மாணவன், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினான். அவனது கடிதத்துக்கு உடனடியாக பதில்அளித்த பிரதமர், கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றினார்.


பெங்களூரு வித்யாரண்யபுரா தொட்ட பொம்மசந்திரா பகுதியில் வசித்து வரும் 8 வயது சிறுவன் அபினவ், பள்ளிக்கு செல்லும் போது போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி, தினமும் அவதிபட்டு வந்தான். யஷ்வந்த புராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துவரும் அந்த சிறுவன், இந்தபிரச்னைக்கு என்ன தீர்வு என்று தனது தாத்தா விடம் கேட்டுள்ளான்.

அப்போது, அவனது தாத்தா, பிரதமருக்கு கடிதம் எழுதுமாறு ஆலோசனை கூறியுள்ளார். அதன் படி பிரதமர் நரேந்திர மோடிக்கு, அபினவ் கடிதம் எழுதினான். அதில், “கொரகுண்டே பாளையா வெளிப்புற சாலையில் ரயில்வே மேம்பால கட்டுமானபணிகள் பாதியிலேயே நின்று விட்டதால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இதனால் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கு நான் செல்ல 45 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இந்தப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தான்.

உடனடியாக பிரதமரிடம் இருந்து அந்த சிறுவனுக்கு பதில்கடிதம் வந்தது. அதில், அந்த ரயில்வே மேம்பால பணிகளை விரைந்துமுடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் ரயில்வே மேம் பால கட்டுமான பணிகளை விரைவாக முடிக்கும்படி ரயில்வேதுறை அதிகாரிகளுக்கு நரேந்திர மோடி உத்தரவிட்டார்.

இதுபற்றி அபினவ் கூறுகையில், “நான் எழுதிய கடிதத்துக்கு பிரதமர் அலுவலகம் பதில்அனுப்பியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றான்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...