மாணவனின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய பிரதமர்

 போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டுவந்த 3-ம் வகுப்பு மாணவன், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினான். அவனது கடிதத்துக்கு உடனடியாக பதில்அளித்த பிரதமர், கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றினார்.


பெங்களூரு வித்யாரண்யபுரா தொட்ட பொம்மசந்திரா பகுதியில் வசித்து வரும் 8 வயது சிறுவன் அபினவ், பள்ளிக்கு செல்லும் போது போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி, தினமும் அவதிபட்டு வந்தான். யஷ்வந்த புராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துவரும் அந்த சிறுவன், இந்தபிரச்னைக்கு என்ன தீர்வு என்று தனது தாத்தா விடம் கேட்டுள்ளான்.

அப்போது, அவனது தாத்தா, பிரதமருக்கு கடிதம் எழுதுமாறு ஆலோசனை கூறியுள்ளார். அதன் படி பிரதமர் நரேந்திர மோடிக்கு, அபினவ் கடிதம் எழுதினான். அதில், “கொரகுண்டே பாளையா வெளிப்புற சாலையில் ரயில்வே மேம்பால கட்டுமானபணிகள் பாதியிலேயே நின்று விட்டதால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இதனால் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கு நான் செல்ல 45 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இந்தப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தான்.

உடனடியாக பிரதமரிடம் இருந்து அந்த சிறுவனுக்கு பதில்கடிதம் வந்தது. அதில், அந்த ரயில்வே மேம்பால பணிகளை விரைந்துமுடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் ரயில்வே மேம் பால கட்டுமான பணிகளை விரைவாக முடிக்கும்படி ரயில்வேதுறை அதிகாரிகளுக்கு நரேந்திர மோடி உத்தரவிட்டார்.

இதுபற்றி அபினவ் கூறுகையில், “நான் எழுதிய கடிதத்துக்கு பிரதமர் அலுவலகம் பதில்அனுப்பியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றான்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...