சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலைப்பணிகல் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்

சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலையில் கர்நாடகாவிற்குள் அனைத்து பணிகளும் முழுமை பெற்றுவிட்டன. இன்னும் தமிழகப் பணிகள் மட்டும் எஞ்சியுள்ளன. இதுதொடர்பாக எதிர்பார்ப்பு நீடித்து வரும் நிலையில் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்கின்றனர். தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில் எம்.பிக்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த மத்திய அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலை தொடர்பான கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார். அதில், மொத்தம் 261.70 கிலோமீட்டர் நீளம் கொண்ட எக்ஸ்பிரஸ்வே சாலையில் தமிழகத்தில் மட்டும் 105.70 கிலோமீட்டர் தூரம் இடம்பெற்றுள்ளது. இதற்காக 7,525 கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது.

எந்தளவிற்கு பணிகள் முடிவடைந்துள்ளன என்று பார்த்தால் குடிபாலா – வாலாஜாபேட்டை இடையிலான 24 கிலோமீட்டரில் 72 சதவீதம், வாலாஜாபேட்டை – அரக்கோணம் இடையிலான 24.5 கிலோமீட்டரில் 86 சதவீதம், அரக்கோணம் – காஞ்சிபுரம் இடையிலான 25.5 கிலோமீட்டரில் 52 சதவீதம், காஞ்சிபுரம் – ஸ்ரீபெரும்புதூர் இடையிலான 32.1 கிலோமீட்டரில் 65 சதவீதம் எனப் பணிகள் முடிந்துள்ளன.

இதில் குடிபாலா – வாலாஜாபேட்டை, வாலாஜாபேட்டை – அரக்கோணம், அரக்கோணம் – காஞ்சிபுரம் ஆகியவற்றின் பணிகள் மார்ச் 2025ல் முடிவடையும். காஞ்சிபுரம் – ஸ்ரீபெரும்புதூர் இடையிலான பணிகள் ஜூலை 2025ல் நிறைவு பெறும். இருங்காட்டுக்கோட்டை ட்ரம்பட் இண்டர்சேஞ்ச் சாலை ஆகஸ்ட் 2025ல் முடிவடையும். இதில் குடிபாலா – வாலாஜாபேட்டை, வாலாஜாபேட்டை – அரக்கோணம், அரக்கோணம் – காஞ்சிபுரம் ஆகியவற்றின் பணிகள் மார்ச் 2025ல் முடிவடையும். காஞ்சிபுரம் – ஸ்ரீபெரும்புதூர் இடையிலான பணிகள் ஜூலை 2025ல் நிறைவு பெறும். இருங்காட்டுக்கோட்டை ட்ரம்பட் இண்டர்சேஞ்ச் சாலை ஆகஸ்ட் 2025ல் முடிவடையும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...