இந்தியா – பங்களாதேஷ் இடையில் சரக்குகளை விரைவில் கொண்டு செல்ல ஒப்பந்தம்

 இந்தியா – பங்களாதேஷ் இடையில் ஏற்கனவே செய்யப்பட்ட கடற்கரை கப்பல் ஒப்பந்ததினை செயல் படுத்தும் விதத்திலான செயல் முறை பொதுத் திட்டத்தில் இரு நாடுகளும் ஞாயிற்றுக் கிழமை கையெழுத்திட்டன.

மத்திய கப்பல் மற்றும் போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி முன்னிலையில் புது டெல்லியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய கப்பல்துறை அமைச்சகத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் மற்றும் பங்களா தேஷை சேர்ந்த மூத்தபொறியாளர் மற்றும் கப்பல்துறை அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிதின் கட்கரி கருத்து தெரிவிக்கும்போது, ‘இந்தியா – பங்களாதேஷ் கடற்கரை கப்பல் ஒப்பந்தம் நடை முறைப்படுத்த தொடங்கினால் இரு நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி, இறக்குமதியை அனைத்து வகையிலும் எளிமைபடுத்த முடியும்.

பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் பங்களாதேஷ் சென்றபோது இரு நாடுகளுக்கு இடையே 22 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் பங்களாதேஷில் உள்ள மோங்லா மற்றும் சிட்டகாங் துறை முகத்துக்கு இந்திய சரக்கு கப்பல்களை அனுமதிக்கவும் ஒப்பந்தமும் ஒன்று.

இது வரை இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வழியாகவே சரக்குகப்பல்கள் பங்களாதேஷுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தத்தை அடுத்து இனி நேரிடை யாகவே இந்தியாவிலிருந்து பங்களாதேஷுக்கு சரக்குகளை கொண்டு செல்ல முடியும்.

இதுவரை பங்களாதேஷுக்கு சரக்குகள் செல்ல 30 முதல் 40 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், இனி மேல் ஒரே வாரத்தில் சரக்குகளை கொண்டு செல்ல முடியும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.