ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

 உடல் பொன்னிறமாக
ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு செய்து உண்ணலாம். நாளடைவில் தேஜஸ் உண்டாகும்.

நீர் வேட்கை தனிய வேண்டுமானால், ஆவாரம் பூவைத் தேவையானதை எடுத்து ஊற வைத்துக் குடிநீர் தயார் செய்து அருந்தலாம்.

இப்பூவை சமையலில் பக்குவப்படுத்திச் சாப்பிட கற்றாழை வாசனை, நீரிழிவு, உடம்பில் உப்புப் பூத்தல் வறட்சி சமப்படும்.

இதை வதக்கி கண் நோய்க்கு ஒத்தடம் இடலாம் குடி நீரிட்டுப் பால் சேர்த்துச் சாப்பிட உட்சூடு தணியும். இப் பூவுடன், பச்சைப் பயறு சேர்த்தரைத்து நமைச்சலுக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.

உடல் சூடு, மேகவெட்டை, துர்நாற்றம் நீங்க
தேவையான ஆவாரம் பூக்களைக் கொண்டு வந்து சுத்தம் பார்த்து வெயிலில் உலர்த்திக் காய வைத்து எடுத்து இடித்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு இத்தூளை மெல்லிய துணியில் போட்டு வடிகட்டி, வடிகட்டிய தூளைக் காய்ச்சிய பாலில் ஒரு தேக்கரண்டி போட்டு சிறிது சர்க்கரை சேர்த்து அருந்தி வர உடலில் காணும் துர்நாற்றம், வியர்வை மற்றும் உடலின் வறட்சியையும் சோர்வையும் போக்கி வலிமையைத் தரும். இப்பூவுக்கு உடல் நிறத்தைத் தங்க நிறமாக மாற்றும் ஆற்றலுண்டு.

மஞ்சள்நிறப் பூப் பூத்து நம்மைக் கவர்ந்திழுக்கும் ஆவாரையின் மருத்துவக் குணம் காலம் காலமாகச் சிறந்த ஒன்றாகும்.

 

கிராமப்புறங்களில் இதன் இலை, பூ, காய்களைப் பறித்து வந்து இளம் வெய்யிலிலும், நிழலிலுமாக உலர்த்தி வற்றல் இட்டு வைத்துக் கொள்வார்கள். தயிரில் சிறிது உப்பிட்டு அதில் கொட்டி ஊற வைத்து மறுநாள் காலையில் அதை வெய்யிலில் வைத்து மீண்டும் இரவில், எஞ்சிய அதே தயிரில் கொட்டி வைத்து மறுநாள் மீண்டும் காய வைத்து இவ்விதமாகச் சுண்டைவற்றல், மோர் மிளகாய் இவற்றைத் தயாரிப்பது போலத் தயாரித்து வைத்துக் கொண்டு தேங்காய் எண்ணெய்யில் வறுத்துச் சாப்பிட ருசியாகவும் அதே நேரத்தில் சர்வ ரோகங்களையும், குறிப்பாக மேக சம்பந்தப்பட்ட நோய்களையும் ‘குறி’ சம்பந்தப்பட்ட நோய்களையும், நீரிழிவையும் குணப்படுத்தும் நல்ல மருந்துப் பொருளாகும்.

 

பூ, காய், மொட்டு இவைகளை உலர்த்தி வைத்துக் கொண்டு வேண்டுமளவு இட்டுக் கொதிக்க வைத்து இதனுடன் பனங்கற்கண்டு, பசும்பால் சேர்த்துப் பருகினால் சிறந்த பானமாகும்.

 

மொட்டு, பூ இவைகளை இட்டு அவியல் வைத்துச் சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்.

 

ஆவாரம்பூவைச் சுத்தம் செய்து பாசிப் பருப்புடன் சேர்த்துக் கூட்டுச் செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு, சிறுநீருடன் இரத்தம் வெளியாதல், பெண்களைப் பொறுத்தவரையில் பெரும்பாடு போன்றவை குணமாகும்.

 

ஆவாரம் பூக்களை நிறைய அளவில் கொண்டு வந்து சுத்தம் செய்து வதக்கி கற்கண்டு சேர்த்து ஆட்டுக்கல்லில் அல்லது மிக்சியில் இட்டு நன்கு அரைத்துப் பின்னர் சுத்தமான புதிய தேன் கலந்து நன்கு பிசைந்து வெய்யிலில் இரண்டு தினங்கள் காய வைத்துப் புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் இரண்டு வேளை ஒரு தேக்கரண்டி அளவு உட்கொண்டு வந்தால் நீரிழிவு குணமாகும். நீர்க்க்கடுப்பு உட்சூடு இவை குணமாகும்.

 

இந்தப் பூவை நன்கு உலர்த்திப் பொடி செய்து கடலை மாவுடன் கலந்து தேய்த்துக் குளித்து வரக் கற்றாழை நாற்றம், தேகத்தில் உப்புப் படிதல் இவை குணமாகும்.

 

ஆவாரைச் செடியினுடைய பிசின் கிடைப்பது கஷ்டம். எறும்புகள் இந்தப் பிசினை விட்டு வைக்க மாட்டா. இந்தப் பிசின் கிடைத்தால் இதைச் சேர்த்து வைத்துக் கொண்டு, தினமும் நான்கு குன்றிமணி எடை எடுத்துப் பொடித்துப் பசுவின் பாலைக் காய்ச்சி ஆற வைத்து அதனுடன் கலந்து ஒரு மண்டலம் உட்கொள்ள நீரிழிவு குணமாகும். தாது நஷ்டத்தை ஈடுகட்டும். ஆண்மை தன்மை பெருகும்.

 

ஆவாரம் பூவை பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை பொரியல் செய்து சாப்பிடலாம்.

 

இந்தப் பூவை உலர்த்திப் பொடி செய்து, மஞ்சள், சந்தனம், கோரைக்கிழங்கு இவைகளுடன் மூலிகை வாசனைப் பொருட்களையும் சேர்த்துக் குளிக்கும்போது தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

TAG; ஆவாரம் பூ, உடல் பொன்னிறமாக, ரிழிவு, உடம்பில் உப்புப் பூத்தல், உடல் சூடு, மேகவெட்டை, துர்நாற்றம் நீங்க, நீர் கடுப்பு, உட்சூடு, தோல் நோய், பூ, ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

 

One response to “ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...