இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. பசும் துத்தி, கருந்துத்தி, நிலத்துத்தி எனப் பலவகையுள்ளன. பசுந்துத்தியின் பயனே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இலை பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவக் குணமுடையது.
துத்திப் பூவின் சூரணத்தை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கற்கண்டு சேர்த்து பசும் பாலில் கொதிக்க வைத்து காலை வேளை மட்டும் ஏழுநாட்கள் கொடுத்துவர இரத்த வாந்தி குணமாகும்.
துத்திக் கீரையை ஆய்ந்து பருப்புச் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்துத் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டுவர மூலம் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும்.
இலையில் விளக்கெண்ணெய் தடவி தணலில் காண்பித்து துவள வதக்கி அதை ஆசனத்தில் வைத்துக்கட்டி வந்தால் மூலக்கடுப்பு குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
You must be logged in to post a comment.
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
3obadiah