இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. பசும் துத்தி, கருந்துத்தி, நிலத்துத்தி எனப் பலவகையுள்ளன. பசுந்துத்தியின் பயனே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இலை பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவக் குணமுடையது.
துத்திப் பூவின் சூரணத்தை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கற்கண்டு சேர்த்து பசும் பாலில் கொதிக்க வைத்து காலை வேளை மட்டும் ஏழுநாட்கள் கொடுத்துவர இரத்த வாந்தி குணமாகும்.
துத்திக் கீரையை ஆய்ந்து பருப்புச் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்துத் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டுவர மூலம் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும்.
இலையில் விளக்கெண்ணெய் தடவி தணலில் காண்பித்து துவள வதக்கி அதை ஆசனத்தில் வைத்துக்கட்டி வந்தால் மூலக்கடுப்பு குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
You must be logged in to post a comment.
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
3obadiah