காங்கிரஸ் ஒரு தேசவிரோத கட்சி

 தனி நாடுகோரும் அமைப்பு நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ், ஒரு தேச விரோத கட்சி என்று அகாலிதளம் குற்றம் சாட்டியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸில் ‘சர்பாத்–இ–ஹால்சா’ என்ற சீக்கிய அமைப்பின் சார்பில் கடந்த 10–ந் தேதி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் சீக்கியர்களுக்காக காலிஸ் தான் தனிநாடு உருவாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ஆளும் சிரோ மணி அகாலி தளம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து டெல்லியில் பஞ்சாப் மாநில துணை முதல்மந்திரி சுக்பீர் சிங் பாதல் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஐஎஸ்ஐ. மற்றும் பாகிஸ் தானுடன் தொடர்புடைய அமைப்பின் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றதன் மூலம் அக் கட்சியின் உண்மையான முகம் வெளிப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் பஞ்சாபில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து தனி நாடு கோரும் அமைப்பு கூட்டத்தில் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தனிநாடு கோரிக்கையை காங்கிரஸ் தலைமை ஆதரிக்கிறதா?. இல்லை யென்றால் அந்தகூட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது சோனியா காந்தி நடவடிக்கை எடுக்காதது ஏன்?. பஞ்சாபில் கடந்த 1980ம் ஆண்டு நடைபெற்ற கருப்புநாட்களை மீண்டும் கொண்டு வர ராகுல் காந்தி முயற்சிக்கிறார். அரசியல் காரணங் களுக்காக தீவிரவாத அமைப்பை காங்கிரஸ் ஆதரிக்கிறது. காங்கிரஸ் ஒரு தேசவிரோத கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...