இந்தியாவிலே மிகப்பெரிய ஊழல் முதல்வர் ஜார்கண்ட் முதல்வர் -ராஜ்நாத் சிங் பேச்சு

இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் முதல்வராக, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளார்,’ என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

இந்தாண்டு இறுதியில், ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, அதற்கு தயாராகும் வகையில், இன்று பா.ஜ., பரிவர்தன் யாத்ரா ஊர்வலம் அந்த மாநிலத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றினார்.

பின்னர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஹேமந்த் சோரன், மிகப்பெரிய ஊழல் முதல்வர். அவர், இந்தியாவின் சக்திவாய்ந்த ஜனநாயகத்தை, ஊழலால் கறைபடிய வைக்கிறார். இந்தியா, இது போன்ற மனிதர்களை ஏற்றுக்கொள்ளாது. இதனால், மாநிலத்தில் பா.ஜ., தலைமையிலான அரசை அமைக்க வேண்டும். ஹேமந்த் சோரன் அரசு மாற்றப்பட வேண்டும்.

ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா (ஜே.எம்.எம்) காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றன. ரோஹிங்யா, வங்கதேச முஸ்லிம்கள் குறித்து, பா.ஜ.க., எடுத்து வரும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளாமல் மாநில அரசு குற்றம் செய்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல், அமெரிக்கா சென்று இந்தியாவை குறை கூறி பேசினார். இந்தியாவில், சீக்கிய சமூகத்தினருக்கு, பாதுகாப்பு இல்லை என பேசினார். வெளிநாடுகளில், இந்தியாவின் செல்வாக்கை குறைத்து மதிப்பிட்டு பேசுகிறார். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆட்சியாளர் தனக்கு எதிரான மிக மோ ...

ஆட்சியாளர் தனக்கு எதிரான மிக மோசமான கருத்துக்களை கூட சகித்துக்கொள்வதும், சுயபரிசோதனை செய்துகொள்வதும் தான் ஜனநாயகம் -நிதின் கட்கரி 'ஆட்சியாளர் தனக்கு எதிரான மிக மோசமான கருத்துக்களை கூட ...

இந்தியாவிலே மிகப்பெரிய ஊழல் மு ...

இந்தியாவிலே மிகப்பெரிய ஊழல் முதல்வர் ஜார்கண்ட் முதல்வர் -ராஜ்நாத் சிங் பேச்சு இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் முதல்வராக, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் ...

2026-ம் ஆண்டிற்குள் நக்சலிசம் முட ...

2026-ம் ஆண்டிற்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் அமித் ஷா உறுதி வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலிசம் முடிவுக்கு ...

ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் க ...

ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் கற்களுக்கு பதிலாக பேனாவும் புத்தகமும்  இருப்பதாக மோடி நெகிழ்ச்சி ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் தற்போது கற்களுக்குப் பதிலாக பேனாவும், ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...