திட்டமிட்டு இந்து குடும்பங்களை தகர்க்கிறார்கள்

சசிகலா டீச்சரின் பேச்சு மிக உருக்கமாக இருந்தது. தமிழகத்தில் இப்படி ஒரு உணர்வுள்ள பெண் பேச்சாளர் இல்லையே என்று வருந்த‌ வைத்தது !! அவரின் பேச்சிலிருந்து ……...

இந்து மதம் என்கிற நம் சனாதன தர்மத்தின் ஆணி வேராக நம் கோவில்கள் இல்லை. ஏனென்றால் பல ஆயிரம் கோவில்களை அழித்த பின்பும் கூட நம் தர்மத்தை ஒன்றுமே செய்ய இயலவில்லை. இந்து மதத்தின் ஆணி வேராக புனித புத்தகங்கள் இருக்கின்றனவா என்றால் அதுவும் இல்லை. ஏனென்றால் பல கோடி புனித நூல்களை அந்நியர்கள் அழித்து விட்டனர், ஏன் தக்ஷசீலா பல்கலை கழகத்தையே எரித்து நாசமாக்கினர். இருந்தும் நம் தர்மத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்படி நம்முடைய பலவற்றை அந்நிய சக்திகள் அழித்தும் நம் தர்மத்திற்கு எந்த சேதத்தையும் அவர்களால் செய்ய இயலவில்லை.

எது நம் தர்மத்தை தாங்கி நிற்கிறது என்று பார்த்தால் அது நம் குடும்பங்களே !! பல ஆயிரம் வருடங்களாக ஒவ்வொரு குடும்பமும் இந்து தர்மத்தை தாங்கி நிற்கின்றன. எத்தனையோ தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ராம நாமத்தை சொல்ல வைக்கிறார்க‌ள், பக்தியில் லயிக்க வைக்கிறார்க‌ள். ஆனால் அந்த குடும்பத்தை இன்று "லவ் ஜிஹாத்" தகர்த்து கொண்டிருக்கிறது.

அதனால் தான் கேரளத்தில் அவர்கள் கோவில்களை குறி வைக்கவில்லை. கோவில்களில் வழக்கம் போல் உற்சவங்கள் நடக்கின்றன. ஆனால் இன்று கேரளத்தில் அவர்கள் குறி வைத்திருப்பது இந்து குடும்பங்களை.
"லவ் ஜிகாத்" என்கிற மிக கொடுமையானதொரு சூழ்ச்சியால் பல மாணவிகளை குறி வைத்து திட்டமிட்ட முறையில் காய்கள் நகர்த்துகிறார்கள். முதலில் மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து, பின்னர் அவர்களை மதமாற்றம் செய்கிறார்கள். மதமாற மறுக்கும் மாணவிகளுக்கு நடக்கும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு கல்லூரி மாணவி காதல் வலையில் விழுந்து மதமாற மறுத்ததால் அவள் மொட்டையடிக்கப் பட்டு, துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டாள். இதை எந்த ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை. இதை குறித்து பேசினால் அது மதவாதமாகிவிடும் என்று அவை பயந்தன. இத்தனைக்கும் அந்த பெண்னை வலையில் விழ வைத்தவன் ஏற்கனவே திருமணமானவன். இன்று கேரளத்தில் இந்து குடும்பங்களை திட்டமிட்டு சீரழித்து "பீஃப்" சாப்பிடும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கோவில்களை அழித்தால் கூட கட்டிக் கொள்ளலாம், ஆனால் நம் குடும்பங்கள் போனால் அது ஈடு செய்ய இயலாத இழப்பை ஏற்படுத்தும். அதுதான் இன்று நடந்துக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...