10 லட்சத் துக்கும் மேல் வருமானம் உடையவர்களுக்கு மானியவிலை சமையல் எரி வாயு மானியம் ரத்து

ஆண்டுக்கு ரூ. 10 லட்சத் துக்கும் அதிகமாக வருமானம் உடைய வர்களுக்கு மானியவிலையில் சமையல் எரி வாயு வழங்குவது அடுத்த மாதம் முதல் ரத்துசெய்யப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு:

வீடு ஒன்றுக்கு ஆண்டுக்கு 12 சமையல் எரி வாயு உருளைகள் மானியவிலையில், ரூ. 419.26க்கு தற்போது வழங்கப்படுகின்றன. அதன் சந்தைவிலை ரூ.608 ஆகும்.

நாட்டில் தற்போது 16.35 கோடி எரி வாயு வாடிக்கையாளர்கள் உள்ளனர். எரி வாயு மானியத்தை நேரடியாக வாடிக்கையாளரின் வங்கிகணக்குக்கு வழங்கும் திட்டத்தின்கீழ் தற்போது, 14.78 கோடி பேருக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சமையல் எரி வாயுக்கு வழங்கும் மானியத்தால் ஏற்படும் நிதிச் சுமையை குறைக்கும் வகையில், வசதிபடைத்தவர்கள் தங்களது மானியத்தை தாங்களே முன் வந்து விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும், சந்தை விலையில் வாங்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.

அதையேற்று, 57.5 லட்சம்பேர் சமையல் எரி வாயு உருளைக்கான மானியத்தை விட்டு கொடுத்துள்ளனர்.  இந்நிலையில் அதிகவருமானம் உடையோர் சந்தை விலையில் சமையல் எரி வாயு வாங்கலாம் என அரசு கருதுகிறது.

இதன்படி கடந்த நிதி ஆண்டில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டி, வருமானவரி செலுத்தியவர்களுக்கு வரும் ஜனவரி மாதம் முதல் எரி வாயு மானியம் வழங்கப்பட மாட்டாது. குடும்பத்தில் கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டி, வரி செலுத்தி யிருந்தாலும் மானியம் ரத்துசெய்யப்படும்.

எனவே, அதிகவருமானம் பெறும் சமையல் எரி வாயு வாடிக்கையாளர்கள் ஜனவரி மாதம், புதிய எரி வாயு உருளைக்கு விண்ணப்பிக்கும் போது, தாங்களாகவே தங்களது வருமானம் குறித்த விவரங்களை தெரிவித்து, மானியத்தை விட்டுகொடுக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...