10 லட்சத் துக்கும் மேல் வருமானம் உடையவர்களுக்கு மானியவிலை சமையல் எரி வாயு மானியம் ரத்து

ஆண்டுக்கு ரூ. 10 லட்சத் துக்கும் அதிகமாக வருமானம் உடைய வர்களுக்கு மானியவிலையில் சமையல் எரி வாயு வழங்குவது அடுத்த மாதம் முதல் ரத்துசெய்யப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு:

வீடு ஒன்றுக்கு ஆண்டுக்கு 12 சமையல் எரி வாயு உருளைகள் மானியவிலையில், ரூ. 419.26க்கு தற்போது வழங்கப்படுகின்றன. அதன் சந்தைவிலை ரூ.608 ஆகும்.

நாட்டில் தற்போது 16.35 கோடி எரி வாயு வாடிக்கையாளர்கள் உள்ளனர். எரி வாயு மானியத்தை நேரடியாக வாடிக்கையாளரின் வங்கிகணக்குக்கு வழங்கும் திட்டத்தின்கீழ் தற்போது, 14.78 கோடி பேருக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சமையல் எரி வாயுக்கு வழங்கும் மானியத்தால் ஏற்படும் நிதிச் சுமையை குறைக்கும் வகையில், வசதிபடைத்தவர்கள் தங்களது மானியத்தை தாங்களே முன் வந்து விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும், சந்தை விலையில் வாங்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.

அதையேற்று, 57.5 லட்சம்பேர் சமையல் எரி வாயு உருளைக்கான மானியத்தை விட்டு கொடுத்துள்ளனர்.  இந்நிலையில் அதிகவருமானம் உடையோர் சந்தை விலையில் சமையல் எரி வாயு வாங்கலாம் என அரசு கருதுகிறது.

இதன்படி கடந்த நிதி ஆண்டில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டி, வருமானவரி செலுத்தியவர்களுக்கு வரும் ஜனவரி மாதம் முதல் எரி வாயு மானியம் வழங்கப்பட மாட்டாது. குடும்பத்தில் கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டி, வரி செலுத்தி யிருந்தாலும் மானியம் ரத்துசெய்யப்படும்.

எனவே, அதிகவருமானம் பெறும் சமையல் எரி வாயு வாடிக்கையாளர்கள் ஜனவரி மாதம், புதிய எரி வாயு உருளைக்கு விண்ணப்பிக்கும் போது, தாங்களாகவே தங்களது வருமானம் குறித்த விவரங்களை தெரிவித்து, மானியத்தை விட்டுகொடுக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...