கும்பமேளா மூலம் ரூ 30 கோடி வருமானம் ஈட்டிய படகோட்டி குடும்பம் – யோகி ஆதித்யநாத்

கும்பமேளாவின் மூலம் படகு உரிமையாளர் குடும்பம் ரூ.30 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.

உ.பி.யில் மஹா கும்பமேளா நிகழ்வு ஜன.13ம் தேதி தொடங்கி பிப்.26ம் தேதி நிறைவு பெற்றது. எதிர்பார்ப்புக்கும் மேலாக 65 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மேளாவில் பங்கேற்று புனித நீராடினர். இந்நிலையில், சட்டசபையில் கும்பமேளா விழாவால் படகு ஓட்டுபவர்கள் பாதிக்கப்பட்டதாக சமாஜ்வாதி கடும் குற்றச்சாட்டை முன் வைத்தது. இதற்கு சட்டசபையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலளித்து கூறியதாவது;

கும்பமேளாவில் நிகழ்ந்த வெற்றிக்கதை ஒன்றை நான் கூறுகிறேன். பிரயாக்ராஜில் 130 படகுகளை வைத்து ஒரு குடும்பம் தொழில் செய்து வருகிறது. ஒவ்வொரு படகு மூலம் அவர்கள் ரூ.50,000 முதல் ரூ.52,000 வரை வருமானம் ஈட்டினர்.

கும்பமேளா நடந்த 45 நாட்களில் அவர்கள் ரூ.30 கோடி சம்பாதித்துள்ளனர். ஒவ்வொரு படகு மூலம் அவர்களுக்கு ரூ,30 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

மகா கும்பமேளா விழாவுக்காக ரூ.7500 கோடி முதலீடு செய்யப்பட்டு, ரூ,3 லட்ம் கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. முதலீடு என்பது கும்பமேளாவுக்கு என்று மட்டும் அல்லாமல் அதன் மூலம் பெறும் உபரி வருமானம், வளர்ச்சி ஆகியவற்றுக்காகவும் செலவிடப்பட்டது.

இந்த விழா மூலமாக ஓட்டல் தொழிலில் ரூ.40,000 கோடி, போக்குவரத்துக்கு ரூ.1.5 லட்சம் கோடி, சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.300 கோடி வர்த்தகம் நடைபெற்று இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...