அத்தியின் மருத்துவ குணம்

 சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ஐந்தும்,அத்திப்பட்டையில் ஒரு கைபிடியளவும் எடுத்து அம்மியில் நன்றாக நைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ப்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி மிதமான சூட்டில் இருக்கும்பொழுது மூலத்தின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கழுவி வர வேண்டும். இப்படி காலை, மாலை செய்து வந்தால் மூலம் சுருங்கி உள்ளேயே நின்று விடும்.

 

மலச் சிக்கலை நீக்க உணவிற்கு பிறகு சிறிதளவு அத்தி விதைகளை சாப்பிடலாம்,
நாள்பட்ட மலச் சிக்கலை குனபடுத்த 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்

ஒரு கைப்பிடியளவு அத்திப்பட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து அதை வடிகட்டி புண்ணை கழுவி துடைக்க வேண்டும். பிறகு எந்த மருந்தைப் போட்டாலும் ஆறாத புண்ணும் ஆறும்.

 

நீண்டநாள் நோய் வாய்ப்பட்டிருந்தவர் விரைந்து குணம் பெற உதவும். முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவரக் கூடிய உணவாக கருதப்பட்டு. உடல் மற்றும் மனம் சார்ந்த சிரமத்தை நீக்கும். உடம்பின் ஆற்றலை, திடத்தைப் புதுப்பித்துக் கொடுக்கும்.

மாதவிடாய்க் காலத்தில் அதிக அளவு இரத்தப்போக்கு வயிற்றுக்கடுப்பு, ஈரல் அழற்சி குணம் காண 150 கிராம் உலர்ந்த திராட்சை பழத்துடன் தேன் கலந்து உண்ணலாம். நீரிழிவிலும் நல்ல பலனளிக்கும். உலர்ந்த பழக்கஷாயம் கொண்டு வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் சரியாகும்.

மலச்சிக்கல்


பறித்த பலமாகவோ, உலர்த்தியதாகவோ எப்படி இருந்தாலும் அது மலமிலக்கியாக செயல்படும். குடலில் குவிவது போன்ற அல்லது அலை மாதிரியான அசைவுகளை தூண்டும்.

மூலம்


மலமிளக்கிப் பண்பு காரணமாக இது மூலத்தை குணப்படுத்தவும் உதவும். இரண்டு அல்லது மூன்று பழங்களை ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் ஊறவைக்கவும். காலையில் உட்கொள்ளலாம். அதே மாதிரி மாலையிலும் பழங்களை உண்ணலாம். மலம் கழிப்பதில் உள்ள சிரமத்தை நீக்கும். அவ்விதமாக ஆசனவாய் பிதுக்கத்தை தடுக்கும். அத்திப்பழத்தை மேற்சொன்னவாறு 3-4 வாரங்கள் தொடர்ந்து உண்டுவர மூலநோய் குணமாகும்.

ஆஷ்துமா


கபத்தை உலரச் செய்வதன்மூலம் ஆஷ்துமா நோயாளிக்கு ஓர் சவுகர்ய உணர்வைத்தரும்.

பால் சார்ந்த பலவீனம்


வாதுமை, பேரீச்சை போன்ற உலர்ந்த பழங்களுடன் அத்திப்பழத்தையும் சேர்த்து உண்ண வேண்டும். வெண்ணெயும் சேர்த்துக் கொள்ளலாம். பால் சார்ந்த பலவீனத்தைப் போக்குவதில் இது நிகரற்றது.

கவனத்திற்கு அத்திப்பழத்தை உபயோகிப்பதற்கு முன் நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும். உலர்ந்த பழத்தின் தோல் கடினமாக இருக்கும் என்பதால் ஊறவைத்து உண்ண வேண்டும் அது எளிதில் சீரணமாகும்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...