உர மானிய திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விவசாயிகளுக்கு பெரும் பலனளிக்கும் வகையில், டி.ஏ.பி., எனப்படும் டை அமோனியம் பாஸ்பேட் உரத்தை மானிய விலையில் வழங்கும் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக மத்திய அரசு 3,850 கோடி ரூபாய் ஒதுக்கிஉள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், விவசாயிகள் நலன் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளதாவது:

விவசாயிகளுக்கு 2014 – 2024 காலகட்டத்தில், 11.9 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உர மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய 2004 – 2014 காலகட்டத்தில், 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே மானியம் வழங்கப்பட்டது.

விவசாயிகள் பெருமளவு பயன்படுத்தும் டி.ஏ.பி., உரத்துக்கு, 1 டன்னுக்கு 3,500 ரூபாய் என்ற அளவுக்கு கூடுதல் மானியத்தை மத்திய அரசு அறிவித்தது. இது, கடந்தாண்டு ஏப்., 1 முதல் டிச., 31 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. உரத்தின் விலையை கட்டுப்படுத்த, 2,625 கோடி ரூபாய் அளவுக்கு மானியம் அளிக்கப்பட்டது.

என்.பி.எஸ்., எனப்படும் ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட உரத்துக்கான மானியத்தைத் தவிர, இந்த மானியமும் கூடுதலாக வழங்கப்படுகிறது.

இந்த ஒரு முறை மானிய திட்டம் நீட்டிக்கப்படுகிறது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை இது நடைமுறையில் இருக்கும். இதற்காக, கூடுதலாக செலவாகும் 3,850 கோடி ரூபாயை ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சர்வதேச அளவில் இந்த உரத்தின் விலை உயர்ந்துள்ள நிலையிலும், விவசாயிகளுக்கு நிதிச் சுமை ஏற்படாமல் இருக்க, மானியத்தை தொடர அரசு முன்வந்துள்ளது. இதன் வாயிலாக, 50 கிலோ மூட்டை அளவுள்ள டி.ஏ.பி., உரம், 1,350 ரூபாய்க்கு கிடைக்கும்.

புதிய ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்தவும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டம், 2021 – 2022 நிதியாண்டில் இருந்து 2024 – 2025 வரையிலான காலத்துக்கு ஏற்கனவே, 66,550 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

விவசாயிகளின் பெரும் ஆதரவு மற்றும் அவர்களுக்கு கிடைக்கும் பலன்களை கருத்தில் கொண்டு இந்த திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. இதற்கான மொத்த ஒதுக்கீடு, 69,515 கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

வேளாண் துறையில் தொழில்நுட்ப வசதிகளை அதிகளவில் பயன்படுத்துவதற்காக, 824 கோடி ரூபாய் ஒதுக்கவும் அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப் ...

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்ச ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரத ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.