ஜனவரி ஒன்றாம் தேதிமுதல் குரூப்-சி-டி பிரிவு மத்திய அரசுப்பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட மாட்டாது

ஜனவரி ஒன்றாம் தேதிமுதல் குரூப்-சி பிரிவு மற்றும் குரூப்-டி பிரிவு உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அதேநேரத்தில், ‘‘திறன் அறியும்சோதனை, உடல் தகுதிசோதனை ஆகியவை நேர்முக தேர்வில் இருந்து மாறுபட்டவை. அவை தொடரும். எனினும் இந்தசோதனைகள், தகுதி அடிப்படையில் இருக்கும். இத்தகைய சோதனைகள் மதிப் பெண்கள் அடிப்படையில் இருக்காது’’ என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இனி வரும் ஆட்சேர்ப்பு பணியின் ஒருபகுதியான நியமன விளம்பரங்கள் அனைத்தும் நேர்முகதேர்வு இல்லாமல் இருக்கும். அதேசமையத்தில் சில குறிப்பிட்ட பணிஇடங்களுக்கு நியமனத்தின் ஒரு அங்கமாக நேர்முகதேர்வு தேவை என்று அமைச்சகமோ, துறையோ கருதினால், நேர்முகதேர்வு இல்லை என்ற நடைமுறையில் இருந்து விலக்குகேட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஒப்புதலுடன் மத்திய பணியாளர், பயிற்சிதுறைக்கு விரிவாக எழுதவேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்த பதிலை விளக்கஅறிக்கையாக அனைத்து அமைச்சகங்களும் 7–ந்தேதிக்குள் அளிக்குமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திரமோடி இந்த தகவலை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...