உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

 சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய உயிர்ச்சக்தி ஓட்டத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கும்.

 

ஒரு மனிதனின் உடல் நிலை நன்றாகவோ அல்லது நோய்வாய்ப்படுவதோ இந்த உயிர்ச்சக்தி ஓட்டத்தின் தன்மையைப் பொறுத்தே அமைகிறது.

நுரையீரல் : அதிகாலை 3-5 மணி

இந்நேரத்தில் எழுவது உடல் நலத்திற்கு நன்று. யோகம், தியானப் பயிற்சிகளுக்கு உகந்தது.

பெருங்குடல் : காலை 5-7

இந்நேரத்தில் எழுபவர்களுக்கு மலச்சிக்கல் இராது மலம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

இரைப்பை ; காலை 7-9 

கண்டிப்பாக இந்நேரத்தில் காலை உணவு முடித்திருக்க வேண்டும்.

மண்ணீரல் : காலை 9-11 மணி

மிகச் சிறிய சிற்றுண்டியோ, பானங்களோ இந்நேரத்தில் அருந்தக் கூடாது.

இருதயம் : நண்பகல் 11-1 மணி

கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடித்து உடலை சாந்தப்படுத்திக் கொள்ளலாம்.

சிறுகுடல் : பிற்பகல் 1-3 மணி

மதிய உணவு முடித்துச் சில நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

சிறுநீர்ப்பை : பிற்பகல் 3-5

பானங்களோ, தண்ணீரோ அருந்த உகந்த நேரம்.

சிறுநீரகம் : மாலை 5-7

வழக்கமான வேலையிலிருந்து விடுபட்டு இரவுக்கு முன்பாக வீடு வந்து சேர வேண்டும்.

இருதய மேலுறை : இரவு 7-9 மணி

இரவு உணவு முடித்திருக்க வேண்டும்.

மூன்று வெப்பமூட்டி(முக்குழிப்பாதை) : இரவு 9-11 மணி

ஓய்வு தரவேண்டிய நேரம். இதற்குப் பின் கண்விழித்திருக்கவோ, படிப்பதோ கூடாது.

பித்தப்பை : நடுநிசி 11-1 மணி

கண்டிப்பாக தூங்கிக் கொண்டு இருக்க வேண்டும்.

கல்லீரல் : அதிகாலை 1-3 மணி

ஆழ்ந்த நித்திரையில் இருக்க வேண்டும். விழித்திருந்தால் பார்வை சக்தி குறையும். உறக்கம் பாதிக்கும். உடல் அரிப்பு நமச்சல் அதிகரிக்கும்.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – � ...

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – அமெரிக்கா பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் அதிகரித்து வரும் ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இண� ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: ஜேபி நட்டா சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, ஆன்மிகமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயலாற்ற ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே ப� ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். இதற்கு எதிராக ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள� ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களு� ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களுக்கான அடிக்கல் ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்� ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அதிகரிக்கும் விழிஞ்ஞம் துறைமுகத்தை திறந்த பிரதமர் பேச்சு கேரளாவின் திருவனந்தபுரத்தில், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்த ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...