உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

 சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய உயிர்ச்சக்தி ஓட்டத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கும்.

 

ஒரு மனிதனின் உடல் நிலை நன்றாகவோ அல்லது நோய்வாய்ப்படுவதோ இந்த உயிர்ச்சக்தி ஓட்டத்தின் தன்மையைப் பொறுத்தே அமைகிறது.

நுரையீரல் : அதிகாலை 3-5 மணி

இந்நேரத்தில் எழுவது உடல் நலத்திற்கு நன்று. யோகம், தியானப் பயிற்சிகளுக்கு உகந்தது.

பெருங்குடல் : காலை 5-7

இந்நேரத்தில் எழுபவர்களுக்கு மலச்சிக்கல் இராது மலம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

இரைப்பை ; காலை 7-9 

கண்டிப்பாக இந்நேரத்தில் காலை உணவு முடித்திருக்க வேண்டும்.

மண்ணீரல் : காலை 9-11 மணி

மிகச் சிறிய சிற்றுண்டியோ, பானங்களோ இந்நேரத்தில் அருந்தக் கூடாது.

இருதயம் : நண்பகல் 11-1 மணி

கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடித்து உடலை சாந்தப்படுத்திக் கொள்ளலாம்.

சிறுகுடல் : பிற்பகல் 1-3 மணி

மதிய உணவு முடித்துச் சில நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

சிறுநீர்ப்பை : பிற்பகல் 3-5

பானங்களோ, தண்ணீரோ அருந்த உகந்த நேரம்.

சிறுநீரகம் : மாலை 5-7

வழக்கமான வேலையிலிருந்து விடுபட்டு இரவுக்கு முன்பாக வீடு வந்து சேர வேண்டும்.

இருதய மேலுறை : இரவு 7-9 மணி

இரவு உணவு முடித்திருக்க வேண்டும்.

மூன்று வெப்பமூட்டி(முக்குழிப்பாதை) : இரவு 9-11 மணி

ஓய்வு தரவேண்டிய நேரம். இதற்குப் பின் கண்விழித்திருக்கவோ, படிப்பதோ கூடாது.

பித்தப்பை : நடுநிசி 11-1 மணி

கண்டிப்பாக தூங்கிக் கொண்டு இருக்க வேண்டும்.

கல்லீரல் : அதிகாலை 1-3 மணி

ஆழ்ந்த நித்திரையில் இருக்க வேண்டும். விழித்திருந்தால் பார்வை சக்தி குறையும். உறக்கம் பாதிக்கும். உடல் அரிப்பு நமச்சல் அதிகரிக்கும்.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...