உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

 சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய உயிர்ச்சக்தி ஓட்டத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கும்.

 

ஒரு மனிதனின் உடல் நிலை நன்றாகவோ அல்லது நோய்வாய்ப்படுவதோ இந்த உயிர்ச்சக்தி ஓட்டத்தின் தன்மையைப் பொறுத்தே அமைகிறது.

நுரையீரல் : அதிகாலை 3-5 மணி

இந்நேரத்தில் எழுவது உடல் நலத்திற்கு நன்று. யோகம், தியானப் பயிற்சிகளுக்கு உகந்தது.

பெருங்குடல் : காலை 5-7

இந்நேரத்தில் எழுபவர்களுக்கு மலச்சிக்கல் இராது மலம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

இரைப்பை ; காலை 7-9 

கண்டிப்பாக இந்நேரத்தில் காலை உணவு முடித்திருக்க வேண்டும்.

மண்ணீரல் : காலை 9-11 மணி

மிகச் சிறிய சிற்றுண்டியோ, பானங்களோ இந்நேரத்தில் அருந்தக் கூடாது.

இருதயம் : நண்பகல் 11-1 மணி

கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடித்து உடலை சாந்தப்படுத்திக் கொள்ளலாம்.

சிறுகுடல் : பிற்பகல் 1-3 மணி

மதிய உணவு முடித்துச் சில நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

சிறுநீர்ப்பை : பிற்பகல் 3-5

பானங்களோ, தண்ணீரோ அருந்த உகந்த நேரம்.

சிறுநீரகம் : மாலை 5-7

வழக்கமான வேலையிலிருந்து விடுபட்டு இரவுக்கு முன்பாக வீடு வந்து சேர வேண்டும்.

இருதய மேலுறை : இரவு 7-9 மணி

இரவு உணவு முடித்திருக்க வேண்டும்.

மூன்று வெப்பமூட்டி(முக்குழிப்பாதை) : இரவு 9-11 மணி

ஓய்வு தரவேண்டிய நேரம். இதற்குப் பின் கண்விழித்திருக்கவோ, படிப்பதோ கூடாது.

பித்தப்பை : நடுநிசி 11-1 மணி

கண்டிப்பாக தூங்கிக் கொண்டு இருக்க வேண்டும்.

கல்லீரல் : அதிகாலை 1-3 மணி

ஆழ்ந்த நித்திரையில் இருக்க வேண்டும். விழித்திருந்தால் பார்வை சக்தி குறையும். உறக்கம் பாதிக்கும். உடல் அரிப்பு நமச்சல் அதிகரிக்கும்.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.