10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கார் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர்

இந்தியாவில் வேலையின்மை பிரச்சினை நீண்டகாலமாகவே பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. அரசு தரப்பிலிருந்து நிறைய திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வந்தாலும் இந்தியாவின் மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் இல்லை இன்று கூறப்படுகிறது. இதுபோன்ற சூழலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து அதன்மூலம் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சிறப்புத்திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

சுமார் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் இத்திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி நேற்று (அக்டோபர் 22) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 75,000 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு பெற்றவர் களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “கடந்த 8 ஆண்டுகளாக நாட்டில் நடைபெற்று வரும் வேலை வாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு பிரச்சாரங்களுக்கு இந்த வேலைவாய்ப்புமேளா புதிய வடிவம் அளித்துள்ளது.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை கருத்தில் கொண்டு மத்திய அரசு 75,000 இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பணிநியமனக் கடிதங்களை வழங்கி வருகிறது. ஒரேநேரத்தில் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் ஒரு பாரம்பரியம் தொடங்கப்பட வேண்டும் என்று நாங்கள் முடிவுசெய்தோம். இதனால் திட்டப்பணிகளை ஒருகுறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற கூட்டு மனோபாவம் துறைகளில் உருவாகிறது. வரும் நாட்களிலும், தேர்வர்கள் அவ்வப்போது அரசிடம் இருந்து நியமன கடிதங்களைப் பெறுவார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் பாஜக ஆளும் பல மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இதே போன்ற மேளாக்களை ஏற்பாடு செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அமிர்தகாலத்தில், வளர்ந்த இந்தியாவின் உறுதியை நிறைவேற்றுவதற்காக நாம் தற்சார்பு இந்தியா என்ற பாதையில் முன்னேறி வருகிறோம். இந்தியாவை தன்னம்பிக்கை பாதைக்கு கொண்டுசெல்வதில் புதுமையாளர்கள், தொழில் முனைவோர், தொழிலதிபர்கள், விவசாயிகள் மற்றும் உற்பத்தி மற்றும் சேவைத்துறையைச் சேர்ந்தவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.

லட்சக் கணக்கான காலிப் பணியிடங்களுக்கான தேர்வுப் பணியை சிலமாதங்களில் முடித்து பணி நியமனக் கடிதங்களை வழங்குவது, கடந்த 7-8 ஆண்டுகளில் அரசு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காட்டுகிறது. இன்று வேலை கலாச்சாரம் மாறிவருகிறது. நமது கர்மயோகிகளின் முயற்சியால் அரசுத்துறைகளின் செயல் திறன் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் சுயசான்றொப்பம் மற்றும் நேர்காணலை ரத்து செய்தல் போன்ற நமது ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இளைஞர்களுக்கு உதவியுள்ளன” என்று கூறினார்.

இன்று இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளதாகவும், கடந்த 8 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்த சாதனை நிகழ்த்த பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...