தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்தே பேச்சுவார்த்தை

பஞ்சாப்பின் பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம், இந்தியா வழங்கி யுள்ளது. இதன் அடிப்படையில் பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே வெளியுறவுத் துறைச் செயலர்கள் மட்டத்திலான அமைதி பேச்சு வார்த்தை நடைபெறும் என கூறப்படுகிறது.

பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்ட ஆதாரத்தில், பதன் கோட் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் குறித்தும், அவர்கள், பாகிஸ்தானில் உள்ள வர்களுடன் பேசிய உரை யாடல்களை உளவுத் துறையினர் பதிவு செய்த ஆதாரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்தியா ஆதாரங்கள் வழங்கியுள்ளதை பாகிஸ்தான் அரசும் உறுதிசெய்துள்ளது.

மேலும் பதன்கோட் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, இந்த தாக்குதல்தொடர்பாக இந்திய அரசுடன் தொடர்பில் உள்ளதாகவும், இந்தியா வழங்கிய தகவல்களை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதிகூறியுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே இருநாட்டு வெளியுறவுத் துறை செயலாளர்கள் மட்டத்திலான அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவது என மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பதன்கோட் தாக்குதலுக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைளை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால் பழிக்குபழி வாங்குவோம் என சூளுரைத்துள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அமைதியாக இருக்காது என்றும், அந்நாட்டுக்கு இந்தியாவின் சார்பில் உரியபதிலடி கொடுக்கப்படும் எனவும் நிதின் கட்காரி எச்சரித்துதுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...