தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்தே பேச்சுவார்த்தை

பஞ்சாப்பின் பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம், இந்தியா வழங்கி யுள்ளது. இதன் அடிப்படையில் பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே வெளியுறவுத் துறைச் செயலர்கள் மட்டத்திலான அமைதி பேச்சு வார்த்தை நடைபெறும் என கூறப்படுகிறது.

பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்ட ஆதாரத்தில், பதன் கோட் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் குறித்தும், அவர்கள், பாகிஸ்தானில் உள்ள வர்களுடன் பேசிய உரை யாடல்களை உளவுத் துறையினர் பதிவு செய்த ஆதாரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்தியா ஆதாரங்கள் வழங்கியுள்ளதை பாகிஸ்தான் அரசும் உறுதிசெய்துள்ளது.

மேலும் பதன்கோட் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, இந்த தாக்குதல்தொடர்பாக இந்திய அரசுடன் தொடர்பில் உள்ளதாகவும், இந்தியா வழங்கிய தகவல்களை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதிகூறியுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே இருநாட்டு வெளியுறவுத் துறை செயலாளர்கள் மட்டத்திலான அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவது என மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பதன்கோட் தாக்குதலுக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைளை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால் பழிக்குபழி வாங்குவோம் என சூளுரைத்துள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அமைதியாக இருக்காது என்றும், அந்நாட்டுக்கு இந்தியாவின் சார்பில் உரியபதிலடி கொடுக்கப்படும் எனவும் நிதின் கட்காரி எச்சரித்துதுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...