பாலஸ்தீனத்துக்கு துணை நிற்போம்

இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல்-மாலிகியை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

 பாலஸ்தீனத்துக்கு ஞாயிற்றுக் கிழமை சென்ற சுஷ்மா ஸ்வராஜை அந்நாட்டு வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மேஸன் ஷமியே வரவேற்றார்.

 இதையடுத்து, பாலஸ்தீன தலை நகர் ரமலாவில் உள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலைக்கு சுஷ்மா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 பிறகு, பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவரான முகமது யாசீர் அராஃபத்தின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பாலஸ்தீன மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அந்நாட்டில் இந்தியா செயல் படுத்தி வருகிறது. அந்நாட்டில் இந்திய அரசால் அமைக்கப்பட்ட மின்னணு கற்றல் மற்றும் புத்தாக்கமையத்தை சுஷ்மா திறந்து வைக்க உள்ளார்.

 இரு அமைச்சர்களின் சந்திப்பு குறித்து பாலஸ்தீன வெளியுறவுத் துறை ஊடகப்பிரிவு தலைவர் வால் அல்-பட்டரேகி கூறுகையில், "பாலஸ்தீனத்துக்கு அளித்துவரும் ஆதரவை இந்தியா எப்போதும் தொடரும் என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். இந்தக்கருத்து திருப்தி அளிப்பதாக அமைச்சர் ரியாத் அல்-மாலிக் தெரிவித்தார்' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...