பாலஸ்தீனத்துக்கு துணை நிற்போம்

இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல்-மாலிகியை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

 பாலஸ்தீனத்துக்கு ஞாயிற்றுக் கிழமை சென்ற சுஷ்மா ஸ்வராஜை அந்நாட்டு வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மேஸன் ஷமியே வரவேற்றார்.

 இதையடுத்து, பாலஸ்தீன தலை நகர் ரமலாவில் உள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலைக்கு சுஷ்மா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 பிறகு, பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவரான முகமது யாசீர் அராஃபத்தின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பாலஸ்தீன மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அந்நாட்டில் இந்தியா செயல் படுத்தி வருகிறது. அந்நாட்டில் இந்திய அரசால் அமைக்கப்பட்ட மின்னணு கற்றல் மற்றும் புத்தாக்கமையத்தை சுஷ்மா திறந்து வைக்க உள்ளார்.

 இரு அமைச்சர்களின் சந்திப்பு குறித்து பாலஸ்தீன வெளியுறவுத் துறை ஊடகப்பிரிவு தலைவர் வால் அல்-பட்டரேகி கூறுகையில், "பாலஸ்தீனத்துக்கு அளித்துவரும் ஆதரவை இந்தியா எப்போதும் தொடரும் என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். இந்தக்கருத்து திருப்தி அளிப்பதாக அமைச்சர் ரியாத் அல்-மாலிக் தெரிவித்தார்' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...