உலகின் சாமர்த்தியமான தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் புகழாரம்

உலகில் உள்ள சாமர்த்தியமான தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் என்று குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அலி அல் யாஹ்யா தெரிவித்துள்ளார்.

இந்தியா – குவைத் நாடுகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்தும் விதமாக, கடந்த 3ம் தேதி குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அலி அல் யாஹ்யா இந்தியா வந்தார். பின்னர், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இவருடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி விடுத்த எக்ஸ் தளப்பதிவில், ‘குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அலியை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். குவைத்தில் இந்தியர்களின் நலனுக்காக, ஆழமான மற்றும் வரலாற்று உறவுகளை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது,’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமைச்சர்களை அப்துல்லா அலி சந்தித்து பேசினார். அதன்பிறகு அப்துல்லா அலி செய்தியாளர்களிடம் பேசியதாவது: உலகளவில் சாமர்த்தியமான தலைவர்களில் ஒருவரான பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கொடுத்ததற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியால் இந்தியா சிறந்த நிலையை அடையும் என்பதை உறுதியாக சொல்கிறேன். இந்தியா எங்களின் சிறந்த நட்பு நாடு. இந்தியா – குவைத் நாடுகளுக்கு இடையே உள்ள சிக்கல்களுக்கு கூட்டுக்குழு மூலம் தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன், எனக் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...