வடகிழக்கு பகுதியை வர்த்தக கேந்திரமாக உருவாக்க மத்திய அரசு விரும்புகிறது

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வர்த்தகத்தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வடகிழக்கு பகுதியை வர்த்தக கேந்திரமாக உருவாக்க மத்திய அரசு விரும்புகிறது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
 

அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை உருவாக்கப்பட்டு 180 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மேகாலயா தலை நகர் ஷில்லாங்கில் உள்ள அந்தப்படையின் தலைமையகத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய இருநாள்கள் விழா நடைபெற்றது.


 அதில் கலந்துகொண்டு ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:


 இந்தியா சுதந்திரம்பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் வடக்கு கிழக்கு பகுதிகள் அடையவேண்டிய வளர்ச்சி, இதுவரை ஏற்படவில்லை. வடகிழக்குப் பகுதிகளின் அதிவேக வளர்ச்சிக்கே எங்கள் அரசு முன்னுரிமை அளிக்கிறது.
 எந்தவொரு பகுதியும் வளர்ச்சி யடைய வேண்டுமெனில், போக்குவரத்துவசதி என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். இதனால்மட்டுமே தொடர்புகள் மேம்படுத்தப்பட்டு எல்லை தாண்டிய வர்த்தகம் மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்.


 தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் வர்த்தக தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வடகிழக்கு பகுதியை வர்த்தக கேந்திரமாக உருவாக்க வேண்டும். அதற்கு அப்பகுதிகளில் அமைதி நிலவவேண்டியது கட்டாயமான ஒன்றாகும்.
 

இந்தியா- மியான்மர் எல்லையில் கடந்தகாலங்களில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைகள் மிகவும் சிறப்பாக பணியாற்றியது போல், தற்போது வடகிழக்குப் பகுதிகளில் அமைதியை உறுதிப்படுத்தவும் முக்கிய பங்காற்ற வேண்டும்.


கொடூர செயல்கள் மூலம் இந்தியாவை சீர்குலைக்க பல்வேறு தீய சக்திகள் முயற்சித்து வருகின்றன. அவர்களின் செயல்களை நமது ராணுவப்படைகள் முறியடித்து வருகின்றன. அதைப்போல, வடகிழக்கு பகுதிகளில் செயல்படும் தீய சக்திகளை அஸ்ஸாம் படைகளாகிய நீங்கள் வீழ்த்த வேண்டும்.


 வன்முறையை கைவிட எண்ணும் பயங்கரவாத அமைப்புகளுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளது. எனவே யாரும் வன்முறையை கையில் எடுக்கவேண்டாம் என்பதே என் வேண்டுகோள் .  அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவுகளில் பெண்களை பணியமர்த்தும் முயற்சியைத் தொடங்கியது பாராட்டுக்குரியது என்றார் ராஜ்நாத் சிங்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...