இந்தியாவின் முக்கிய வழித்தடம் – ஜெய்சங்கர் பேச்சு

அபுதாபி, “உலகின் பிற பகுதிகளை சென்றடையக்கூடிய மிக முக்கியமான வழித்தடமாக மத்திய கிழக்கை இந்தியா கருதுகிறது,” என, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில், ரைசினா மாநாட்டு துவக்க விழாவில், நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

நாங்கள் மேற்காசியா என்றழைக்கும் மத்திய கிழக்கு பகுதி இந்தியாவின் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. வளைகுடாவில் இந்தியாவின் வர்த்தக மதிப்பு 13 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 15 லட்சம் கோடி ரூபாய் வரை உள்ளது.

வளைகுடாவில், எங்கள் இருப்பு பரவலாகவும், மிக முக்கியமானதாகவும் உள்ளது. இங்கு, 90 லட்சம் இந்தியர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கா மட்டுமின்றி, மத்திய தரைக்கடல் பகுதிக்குமான நுழைவாயிலாகவும் வளைகுடா உள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதியில், 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தியா வர்த்தகம் செய்கிறது. இங்கு, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றுகின்றனர்.

விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே, பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பணிகளை, இந்தியா இங்கு நிறைவேற்றி வருகிறது.

இந்தியாவின் நீட்டிக்கப்பட்ட அண்டை நாடாக விளக்கும் மத்திய கிழக்குடன் நீண்ட நெடிய உறவு உள்ளது. அதை, மேலும் ஆழப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்.

உலகின் பிற பகுதிகளை சென்றடையக்கூடிய மிக முக்கியமான வழித்தடமாக மத்திய கிழக்கை நாங்கள் கருதுகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தீவிரவாதமும், அமைதிப் பேச்சுவா� ...

தீவிரவாதமும், அமைதிப் பேச்சுவார்த்தையும், ஒருங்கே செல்லவியலாது நாம் அனைவரும் கடந்த சில தினங்களில் நாட்டின் வலிமையையும் ...

பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ� ...

பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான் – உமர் அப்துல்லா 'பாகிஸ்தான் பொய் பிரசாரம் செய்கிறது. அது உலகிற்கே தெரியும்' ...

பாகிஸ்தான் பொருளாதாரத்தையே நி� ...

பாகிஸ்தான் பொருளாதாரத்தையே நிலைகுலைய செய்துவிட்டார் பிரதமர் மோடி புதுடில்லி: இந்தியா சர்வதேச எல்லையைக் கடந்து தங்களின் எல்லைக்குள் ...

டில்லியில் முப்படை தலைமை தளபதி� ...

டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை ...

புத்தரின் போதனைகள் உலக அமைதிக் ...

புத்தரின் போதனைகள்  உலக அமைதிக்கு வழிவகுக்கும் – பிரதமர் மோடி ''புத்தரின் போதனைகள் எப்போதும் உலக சமூகத்தை அமைதியை நோக்கி ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அத� ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்  இன்று பேச்சு வார்த்தை இந்தியா- பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று மாலை பேச்சு ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...