இந்தியாவின் முக்கிய வழித்தடம் – ஜெய்சங்கர் பேச்சு

அபுதாபி, “உலகின் பிற பகுதிகளை சென்றடையக்கூடிய மிக முக்கியமான வழித்தடமாக மத்திய கிழக்கை இந்தியா கருதுகிறது,” என, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில், ரைசினா மாநாட்டு துவக்க விழாவில், நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

நாங்கள் மேற்காசியா என்றழைக்கும் மத்திய கிழக்கு பகுதி இந்தியாவின் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. வளைகுடாவில் இந்தியாவின் வர்த்தக மதிப்பு 13 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 15 லட்சம் கோடி ரூபாய் வரை உள்ளது.

வளைகுடாவில், எங்கள் இருப்பு பரவலாகவும், மிக முக்கியமானதாகவும் உள்ளது. இங்கு, 90 லட்சம் இந்தியர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கா மட்டுமின்றி, மத்திய தரைக்கடல் பகுதிக்குமான நுழைவாயிலாகவும் வளைகுடா உள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதியில், 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தியா வர்த்தகம் செய்கிறது. இங்கு, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றுகின்றனர்.

விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே, பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பணிகளை, இந்தியா இங்கு நிறைவேற்றி வருகிறது.

இந்தியாவின் நீட்டிக்கப்பட்ட அண்டை நாடாக விளக்கும் மத்திய கிழக்குடன் நீண்ட நெடிய உறவு உள்ளது. அதை, மேலும் ஆழப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்.

உலகின் பிற பகுதிகளை சென்றடையக்கூடிய மிக முக்கியமான வழித்தடமாக மத்திய கிழக்கை நாங்கள் கருதுகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.