“சாகர்மாலா’ துறைமுக மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஒருகோடி வேலை வாய்ப்பு

"சாகர்மாலா' துறைமுக மேம்பாட்டு திட்டத்தின்கீழ், அடுத்த 4, 5 ஆண்டுகளில் குறைந்த பட்சம் ஒருகோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என மத்திய தரை வழிப் போக்கு வரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


 நாட்டில் உள்ள 7,500 கி.மீ. கடலோர பாதைகள், 14,500 கி.மீ. நீர்வழிப்பாதைகள், சர்வதேச கடல்சார் வர்த்தக வழிகள் ஆகியவற்றை மேம்படுத்தும் "சாகர் மாலா' திட்டம் தொடர்பான உயர்நிலை குழுவின் கூட்டம், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.


 அதன் பிறகு, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
 "சாகர்மாலா' திட்டத்தின்கீழ் கப்பல் மற்றும் துறைமுகத் துறையில்மட்டும் குறைந்தபட்சம் ஒருகோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அவற்றில், 40 லட்சம் வேலைவாய்ப்புகள் நேரடியாகவும், 60 லட்சம் வேலைவாய்ப்புகள் மறைமுகமாகவும் உருவாக்கப்படும்.


மும்பையில், வரும் 14ம் தேதி முதல் நடைபெறவுள்ள இந்திய கடல்சார் உச்சிமாநாட்டில் மட்டும், இந்த துறையில் சுமார் ரூ.2 லட்சம்கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும்.


 கடல் சார் துறையில் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குவ தற்காகவே, இந்த உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில், பிரதமர் நரேந்திரமோடி வெளியிடவுள்ள அறிவிப்புகளின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துறைமுகத்துறை உந்து சக்தியாகச் செயல்பட முடியும். நாடுமுழுவதும் உள்ள 116 நதிகளை நீர்வழி பாதைகளாக மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டன.


 நீர்வழி பாதைகளை மேம்படுத்துவதன் மூலம், சாலை போக்கு வரத்து, ரயில்வே ஆகியவற்றைவிட நீர்வழிப் போக்குவரத்தின் மூலம் சரக்குகளை கொண்டுச்செல்லும் செலவுகள் குறையும்.


 மேலும், முக்கியத் துறைமுக நகரங்களில் பொலிவுறுநகரங்களை அமைப்பது, மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹால்டியாவுக்கும், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசிக்கும் இடையில் கங்கைநதியில் 1,620 கி.மீ. தூரத்திய நீர்வழித் தடத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம். நாடுமுழுவதும் உள்ள 13 மாநிலங்களில் வசிக்கும் ஒருலட்சம் மீனவர்களின் நலன்களை காப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் நிதின் கட்கரி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...