ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

 குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், அதிசாரம், குடலிரைச்சல், ஆசனக் கடுப்பு, சீதபேதி, சுவாசகாசம், பல் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவை ஓமத்தினால் குணமாகும், இவையனைத்தையும் விடவும் வயிற்றுப் பொருமல், இரைச்சல் இவைகளுக்கு நல்ல மருந்தாகும்.

ஓமத்தைப் பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொண்டு மூன்றில் ஒரு பங்கு கறியுப்புச் சேர்த்துப் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்விதம் பொடித்த ஓமத்தை வாயிலிட்டுச் சிறிதளவு ஆறிய வெந்நீரும் பருகி வர வயிற்றுப் பொருமல், இரைச்சல் இவை குணமாகும். வயிறு இறைந்து இறைந்து பேதியாவாதையும் ஓமக் கஷாயத்தின் மூலம் குணப்படுத்தி விடலாம்.

ஓமத்தை வறுத்துப் பொடித்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வற்ற வைத்துப் பருக வேண்டும்.

ஓமம், சுக்கு, மிளகு, தனியா இவைகளை வறுத்து வைத்துக் கொண்டு தேங்காய்த்துருவலையும் சிறிது வறுத்துப் புளி குறைத்துக் குழம்பு வைப்பார்கள். இந்தக் குழம்பை வாரம் ஒருநாள் வைத்துச் சாப்பிட்டால் வயிற்றுப் பொறுமல், வயிற்று இரைச்சல் இவை ஏற்படாது. ஜீரணமாகாமல் இருந்தால் ஓமக் கஷாயம், ஓமம் வைத்து வறுத்தரைத்துத் தயார் செய்யும் குழம்பு நல்மருந்தாகும்.

ஓமத்தை ஓரளவு சூடு பொருக்க வறுத்துத் துணியில் கட்டி வைத்துக் கொண்டு மார்பிலும் முதுகிலும் ஒத்தடம் கொடுத்து வர ஆஷ்துமாவின் தொல்லை குறையக் காணலாம்.

ஓமத்தை ஒரு சிறிய துணியில் கட்டி முடிந்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு மூக்குத் துவாரம் வழியாகச் சிறிது நேரம் உறிஞ்சிக் கொண்டிருந்தாள் தும்மல் ஏற்பட்டு தலையிலுள்ள நீர் வெளியேறி விடும்.
ஓமம், திப்பிலி, ஆடாதோடையிலை, கசகசாத் தூள் இவைகளை வகைக்கு 20 கிராம் அளவு எடுத்து ஒரு மண்சட்டியில் இட்டுப் போதிய நீர் விட்டுக் கஷாயமாகக் காய்ச்சி தினமும் மூன்று வேளை பருகி வர ஆஷ்துமா குணமாகும்.

அஜீரணத்தைப் போக்க ஓமம் நல்ல மருந்தாகிறது. சிறிதளவு ஓமத்தையும், ஒரு சிட்டிகை அளவு உப்பையும் கலந்து பொடி செய்து உட்கொண்டு ஆறிய வெந்நீர் பருகவும். சிறிது நேரத்தில் பலன் கிடைக்கும்.

ஓமம், சுக்கு, அதிமதுரம், சிற்றதை, திப்பிலி, தேசாவரம் இவைகள் அனைத்திலும் ஒவ்வொன்றிலும் 15 கிராம் அளவு எடுத்து இடித்து ஏறக்குறைய ஒரு லிட்டர் அளவு நீரிலிட்டுக் கால் லிட்டராக வற்ற வைத்து இதனுடன் கருப்புக்கட்டிப் பாகு நன்றாகக் கலந்து இரண்டு தினங்கள் காலையிலும் மாலையிலும் பருகிட கடுமையான உழைப்பால் ஏற்படும் உடல் வலியைக் குணப்படுத்தும் நல்ல மருந்தாகும்.

ஓமம், நாய்க்கடுகு இவை ஒவ்வொன்றிலும் 25 கிராம் அளவு எடுத்துக் கொண்டு நன்றாக அரைத்து எடுக்கும் முன்னால் 75 கிராம் அளவு பனை வெல்லைத்தையும் வைத்து அரைத்து எடுத்துக் காலையிலும் மாலையிலுமாக மூன்று தினங்கள் சாப்பிட்டு வரப் பசியின்மையைப் போக்கலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

புதுதில்லியில் இந்திய செயற்கை ...

புதுதில்லியில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தார் பிரதமர் புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப் ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது போட்றா வெடிய! இந்தியாவின் கைகளுக்குள் வந்த வங்கதேசம்; வெற்றி ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய பிரதமர் அலுவலகம் ஒரு பார்வை அம்மாடியோவ்! இவ்வளவு பாதுகாப்பா?; ஒரு ஈ, எறும்பு கூட ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...