ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

 குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், அதிசாரம், குடலிரைச்சல், ஆசனக் கடுப்பு, சீதபேதி, சுவாசகாசம், பல் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவை ஓமத்தினால் குணமாகும், இவையனைத்தையும் விடவும் வயிற்றுப் பொருமல், இரைச்சல் இவைகளுக்கு நல்ல மருந்தாகும்.

ஓமத்தைப் பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொண்டு மூன்றில் ஒரு பங்கு கறியுப்புச் சேர்த்துப் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்விதம் பொடித்த ஓமத்தை வாயிலிட்டுச் சிறிதளவு ஆறிய வெந்நீரும் பருகி வர வயிற்றுப் பொருமல், இரைச்சல் இவை குணமாகும். வயிறு இறைந்து இறைந்து பேதியாவாதையும் ஓமக் கஷாயத்தின் மூலம் குணப்படுத்தி விடலாம்.

ஓமத்தை வறுத்துப் பொடித்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வற்ற வைத்துப் பருக வேண்டும்.

ஓமம், சுக்கு, மிளகு, தனியா இவைகளை வறுத்து வைத்துக் கொண்டு தேங்காய்த்துருவலையும் சிறிது வறுத்துப் புளி குறைத்துக் குழம்பு வைப்பார்கள். இந்தக் குழம்பை வாரம் ஒருநாள் வைத்துச் சாப்பிட்டால் வயிற்றுப் பொறுமல், வயிற்று இரைச்சல் இவை ஏற்படாது. ஜீரணமாகாமல் இருந்தால் ஓமக் கஷாயம், ஓமம் வைத்து வறுத்தரைத்துத் தயார் செய்யும் குழம்பு நல்மருந்தாகும்.

ஓமத்தை ஓரளவு சூடு பொருக்க வறுத்துத் துணியில் கட்டி வைத்துக் கொண்டு மார்பிலும் முதுகிலும் ஒத்தடம் கொடுத்து வர ஆஷ்துமாவின் தொல்லை குறையக் காணலாம்.

ஓமத்தை ஒரு சிறிய துணியில் கட்டி முடிந்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு மூக்குத் துவாரம் வழியாகச் சிறிது நேரம் உறிஞ்சிக் கொண்டிருந்தாள் தும்மல் ஏற்பட்டு தலையிலுள்ள நீர் வெளியேறி விடும்.
ஓமம், திப்பிலி, ஆடாதோடையிலை, கசகசாத் தூள் இவைகளை வகைக்கு 20 கிராம் அளவு எடுத்து ஒரு மண்சட்டியில் இட்டுப் போதிய நீர் விட்டுக் கஷாயமாகக் காய்ச்சி தினமும் மூன்று வேளை பருகி வர ஆஷ்துமா குணமாகும்.

அஜீரணத்தைப் போக்க ஓமம் நல்ல மருந்தாகிறது. சிறிதளவு ஓமத்தையும், ஒரு சிட்டிகை அளவு உப்பையும் கலந்து பொடி செய்து உட்கொண்டு ஆறிய வெந்நீர் பருகவும். சிறிது நேரத்தில் பலன் கிடைக்கும்.

ஓமம், சுக்கு, அதிமதுரம், சிற்றதை, திப்பிலி, தேசாவரம் இவைகள் அனைத்திலும் ஒவ்வொன்றிலும் 15 கிராம் அளவு எடுத்து இடித்து ஏறக்குறைய ஒரு லிட்டர் அளவு நீரிலிட்டுக் கால் லிட்டராக வற்ற வைத்து இதனுடன் கருப்புக்கட்டிப் பாகு நன்றாகக் கலந்து இரண்டு தினங்கள் காலையிலும் மாலையிலும் பருகிட கடுமையான உழைப்பால் ஏற்படும் உடல் வலியைக் குணப்படுத்தும் நல்ல மருந்தாகும்.

ஓமம், நாய்க்கடுகு இவை ஒவ்வொன்றிலும் 25 கிராம் அளவு எடுத்துக் கொண்டு நன்றாக அரைத்து எடுக்கும் முன்னால் 75 கிராம் அளவு பனை வெல்லைத்தையும் வைத்து அரைத்து எடுத்துக் காலையிலும் மாலையிலுமாக மூன்று தினங்கள் சாப்பிட்டு வரப் பசியின்மையைப் போக்கலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...