1.4 லட்சம் பேருக்கு ரயில்வேயில் புதிய பணி வாய்ப்புகள்

கடந்த 2014 முதல் 2022 வரையிலான எட்டு ஆண்டுகளில், இந்திய ரயில்வேயில் 3,50,204 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க பட்டிருப்பதாகவும், மேலும் 1.4 லட்சம் பேருக்கு விரைவில் பணி வழங்கப்படும் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்விநேரத்தின் போது உறுப்பினா் ஒருவரின் கேள்விக்கு எழுத்து வடிவில் அமைச்சா் பதிலளித்ததாவது:

நாட்டில் வேலைவாய்ப்பை அளிப்பதில் இந்திய ரயில்வே முதன்மை வகிக்கிறது. 2014 முதல் 2022 வரை, ரயில்வே துறையில் 3,50,204 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. பத்துலட்சம் புதிய வேலைவாய்ப்புகளை 2023 ஆண்டுறுதிக்குள் உருவாக்க உள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். அதில் ரயில்வேதுறையின் பங்களிப்பு பிரதானமாக இருக்கும். 1.40 லட்சம் வேலை வாய்ப்புகளை ரயில்வேதுறை அளிக்கும். அதற்கான ஆள் தோ்வுப்பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இந்த ஆண்டு இதுவரை 18,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வே மிகப்பெரிய நிறுவனமாகும். பணி ஓய்வு, பணி விலகல், ஊழியா்மரணம் போன்ற காரணங்களால் இத்துறையில் காலிபணியிடங்கள் உருவாகின்றன. இவற்றை நிரப்புவது வழக்கமான நடைமுறைப்படி தொடா்கிறது. ரயில்வே துறையின் புதியதேவைகளை உத்தேசித்து பணியாளா் தோ்வு முகமைகளாலும் புதியபணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 10,189 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தற்போது 1,59,062 பேரைத் தோ்வு செய்யும்பணிகள் பல்வேறு நிலைகளில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தவழக்கமான நிரந்தர பணி நியமனங்கள் மட்டுமல்லாது, அயல்பணி ஒப்பந்தமுறையிலும் வேலை வாய்ப்புகள் ரயில்வேயில் அளிக்கப்படுகின்றன என்றாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...