முதலில் பிகாரில் சட்ட-ஒழுங்கை நிலைநாட்டுங்கள்

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஒரு சிறந்த நடிகர் என்று லோக் ஜன சக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் கிண்டலாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து பிகார் தலைநகர், பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

பிகார் மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் நிகழாமல் நிதீஷ்குமார் தடுப்பார் என்ற நம்பிக்கையில் அவருக்கு மக்கள் வாக்களித்து வெற்றிபெற செய்தனர். ஆனால், மாநிலத்தில் கொலை, கொள்ளை அதிகரித்ததுடன் போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லா சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், அடுத்த மக்களவை தேர்தலில் நிதீஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த போவதாக ஜனதா கட்சிகள் தெரிவித்துள்ளன. முதலில் பிகாரில் சட்ட-ஒழுங்கை நிலைநாட்ட அவர் முயற்சிக்கட்டும். அதன்பிறகு தேசிய அளவிலான அவரது லட்சியத்தை முன்னெடுக்கலாம்.

பாஜக அல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என நிதீஷ் கூறிவருகிறார். சுமார் 17 ஆண்டுகளாக பாஜக.,வுடனும், ஆர்எஸ்எஸ் அமைப்புடனும் கூட்டணி வைத்திருந்த போது இந்த ஞானோதயம் அவருக்கு வரவில்லையா?

நிதீஷின் இத்தகைய தேர்ந்தநடிப்பை அனைவரும் பாராட்ட வேண்டும். பிகாரில் மதுவிலக்கை தற்போது அமல்படுத்தியுள்ள அவர், இதற்குமுன்னர் பல ஆண்டு காலமாக தெருவுக்குத்தெரு மதுக்கடைகளைத் திறக்க வழிவகுத்தவர் என்பதை மறக்கக்கூடாது என்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...