முதலில் பிகாரில் சட்ட-ஒழுங்கை நிலைநாட்டுங்கள்

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஒரு சிறந்த நடிகர் என்று லோக் ஜன சக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் கிண்டலாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து பிகார் தலைநகர், பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

பிகார் மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் நிகழாமல் நிதீஷ்குமார் தடுப்பார் என்ற நம்பிக்கையில் அவருக்கு மக்கள் வாக்களித்து வெற்றிபெற செய்தனர். ஆனால், மாநிலத்தில் கொலை, கொள்ளை அதிகரித்ததுடன் போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லா சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், அடுத்த மக்களவை தேர்தலில் நிதீஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த போவதாக ஜனதா கட்சிகள் தெரிவித்துள்ளன. முதலில் பிகாரில் சட்ட-ஒழுங்கை நிலைநாட்ட அவர் முயற்சிக்கட்டும். அதன்பிறகு தேசிய அளவிலான அவரது லட்சியத்தை முன்னெடுக்கலாம்.

பாஜக அல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என நிதீஷ் கூறிவருகிறார். சுமார் 17 ஆண்டுகளாக பாஜக.,வுடனும், ஆர்எஸ்எஸ் அமைப்புடனும் கூட்டணி வைத்திருந்த போது இந்த ஞானோதயம் அவருக்கு வரவில்லையா?

நிதீஷின் இத்தகைய தேர்ந்தநடிப்பை அனைவரும் பாராட்ட வேண்டும். பிகாரில் மதுவிலக்கை தற்போது அமல்படுத்தியுள்ள அவர், இதற்குமுன்னர் பல ஆண்டு காலமாக தெருவுக்குத்தெரு மதுக்கடைகளைத் திறக்க வழிவகுத்தவர் என்பதை மறக்கக்கூடாது என்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...