நம்பிக்கை தருகிறது….

தமிழகத்தில் பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்களின் பொதுக்கூட்டத்திற்கு வந்த இந்த கூட்டத்தைப் பார்க்கும் போது நம்பிக்கை வருகிறது.

திராவிடக் கட்சிகளின் பிடியில் சிக்கி க்டந்த அறுபது ஆண்டுகளாக நாசமாகிப் போன தமிழ் நாடு உருப்படும் என்ற நம்பிக்கை வருகிறது.

மதுவுக்கும், இலவசத்திற்கும், வெற்றுப் பயல்களின் வீண் பசப்பு வார்த்தைகளில் மயங்கி தங்களை, தங்கள் சுயத்தை இழந்த தமிழ்க மக்கள் சுய உணர்வைப் பெற்று மீண்டும் உண்மைத் தமிழர்களாக மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை வருகிறது.

அடுக்கு மொழி வார்த்தைகளை பேசி, நாகரீகத்தை மறந்து கேவலமாக பிறரை பேசி, தனி வாழ்வில் ஒழுக்கத்தை மறந்து தங்கள் சுய நலத்திற்காக பலதலைமுறைகளை நாசம் செய்து தங்களின் நூறு தலைமுறைகளுக்குத் தேவையான சொத்துக்களை குவித்த அயோக்கிய அரசியல்வாதிகளின் பிடியில் இருந்து தமிழகம் மீண்டு வரும் என்ற நம்பிக்கை வருகிறது.

ஜாதி இல்லை மதம் இல்லை என்று சொல்லிக் கொண்டு ஜாதிக் கட்சிகளையே நம்பி அரசியல் நடத்திக் கொண்டு இளிச்சவாயர்களான பிராமணர்களை மட்டும் வாய்க்கு வந்தபடி திட்டி அதே நேரம் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் காவடி தூக்கிகளாக இந்த கேவல அரசியலிலிருந்து தமிழகம் விடுபடும் என்ற நம்பிக்கை வருகிறது.

அன்றே முண்டாசுக் கவிஞன் பாரதி சொன்னபடி பாடுவோம்:

ஒளிபடைத்த கண்ணினாய் வாவா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வாவா
களிபடைத்த மொழியினாய் வாவா
கடுமை கொண்டு பொங்குவாய் வாவா

என்று சிம்மமாக கர்ஜனை செய்யும் மோடியின் பின் தமிழகமும் அணிவகுத்து செல்லட்டும். தேசிய நீரோட்டத்தில் தமிழகமும் இணையட்டும். சுயநலமே உருவான திராவிட கட்சிகளின் வரலாறு அழிந்து ஒழியட்டும்.

நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே இந்த நாடும் உயர வேண்டும் உழைக்கும் கரங்களே…
என்று பரணி பாடுவோம். ஆடுவோம், கொண்டாடுவோம். உழைப்போம். தேர்தல் முடியும் வரை கடுமையாக உழைத்து தாமரையை மலரச் செய்வோம்…

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...