மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிட்டு அமைதி பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும்

மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிட்டு அமைதி பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியஅரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்ததை யொட்டி ‘வளர்ச்சித் திரு விழா’ என்ற பெயரில் நாடுமுழுவதும் சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ் பூரில் நேற்று நடந்த கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:

இந்திய மக்கள் வன்முறையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வன்முறை நாட்டின்வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. ஏழைகள் மற்றும் பொது மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் அப்பாவி மக்களை கொல்லமாட்டார்கள். வேறு சித்தாந்தத்தை மாவோயிஸ்டுகள் பின்பற்றலாம். ஆனால், அது அப்பாவிமக்களை கொல்வதாக இருக்கக்கூடாது.

எனவே, மாவோயிஸ்டுகள் வன்முறையை கைவிட்டு அமைதி பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும். வன்முறையை கைவிட்டால் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச மத்திய அரசு தயாராக உள்ளது.

ஜம்முகாஷ்மீர் மாநில எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.