2026-ம் ஆண்டிற்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் அமித் ஷா உறுதி

வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட 55 பேரிடம் அமித்ஷா பேசியதாவது: வன்முறையை கைவிட்டு, மாவோயிஸ்டுகள் சரண் அடைய வேண்டும். நாட்டில் நக்சலைட் தாக்குதல் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டு வரப்படும். இல்லையென்றால் அதற்கு முன்னதாகவே, நக்சலைட் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளனர்.

ஒரு காலத்தில் சத்தீஸ்கரில் பல்வேறு மாவட்டங்களில் நக்சலைட் தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. தற்போது, நான்கு மாவட்டங்களில் மட்டுமே சில நேரங்களில் நக்சலைட் தாக்குதல்கள் நடக்கிறது. சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாநில அரசுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் ஒரு நலத்திட்டத்தை விரைவில் வெளியிடுவோம். வேலைவாய்ப்புகள், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் நடவடிக்கைகள் எடுப்பதில் கவனம் செலுத்தி மக்களுக்கு நாங்கள் உதவுவோம்.

பாதுகாப்புப் படைகள் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர், இந்த ஆண்டு பாதுகாப்புப் படையினரின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் 164 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். எங்களது போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று நான் நம்புகிறேன். ஏற்கனவே ஏற்பட்ட சேதத்தை என்னால் திரும்ப பெற முடியாது. ஆனால் அப்பாவி மக்கள் நக்சலைட் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்த முயற்சிப்பேன். கடந்த காங்கிஸ் ஆட்சியின் போது 6,617 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். இப்போது 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

2026-ம் ஆண்டிற்குள் நக்சலிசம் முட ...

2026-ம் ஆண்டிற்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் அமித் ஷா உறுதி வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலிசம் முடிவுக்கு ...

ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் க ...

ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் கற்களுக்கு பதிலாக பேனாவும் புத்தகமும்  இருப்பதாக மோடி நெகிழ்ச்சி ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் தற்போது கற்களுக்குப் பதிலாக பேனாவும், ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.