கூடங்குளம் அணு உலை திறப்பு பிரதமர் மோடி, ஜெயலலிதா, புதின் பங்கேற்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 1,000 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட முதலாவது அலகினை பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் கூட்டாக புதன் கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.

உலகின் மிகவும் பாதுகாப்பான அணு மின் நிலையங்களில் இதுவும் ஒன்று என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அலகினை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் முறையே தில்லி, சென்னை, மாஸ்கோ நகரங்களில் இருந்தபடி, காணொலி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி: முதலாவது அலகினை நாட்டுக்கு அர்ப்பணித்த பிறகு தில்லியில்இருந்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்திய-ரஷிய கூட்டுமுயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள கூடங்குளம் முதலாவது அலகானது, மாசற்ற மின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் தொடர் முயற்சிக்கு வலிமை சேர்க்கும் வகையில் உள்ளது.

ரஷியாவுடனான உறவை இந்தியர்கள் பெரிதும்விரும்புகின்றனர். தனிப்பட்ட முறையில் நானும் இருநாட்டு நட்புறவுக்கு பெரிதும் மதிப்பளிக்கிறேன். எனவே, நாம் கூட்டாக இணைந்து கூடங்குளம் அணுமின்நிலையத்தின் முதலாவது அலகினை நாட்டுக்கு அர்ப்பணிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. இந்தநிகழ்வு, இந்திய-ரஷிய கூட்டுறவில் வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும். சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமையான வளர்ச்சிப் பாதையை உருவாக்கவேண்டியது நம் இருவரின் (ரஷியா-இந்தியா) கடமை என்பதை இந்நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது. இது, இருநாட்டு நல்லுறவின் வலிமைக்கு மற்றோர் உதாரணமாக மட்டுமன்றி, நமது நட்புறவைக் கொண்டாடும் வகையிலும் அமைந்துள்ளது. மேலும், அணுசக்தித் துறையில் நமதுகூட்டு ஒத்துழைப்புக்கான தொடக்கமே இந்த நிகழ்ச்சி.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட மேலும் 5 அலகுகள் உருவாக்கப்படும்.

அணுமின் நிலையத்தை உருவாக்கிய இந்திய, ரஷிய விஞ்ஞா னிகள் குழு, தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஆகியோருக்கு இந்நாள், மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்துள்ளது. அவர்களின் கடுமையான உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் நான் தலைவணங்குகிறேன். மேலும், அவர்களின் உழைப்புக்கு பலன் கிடைத்திருப்பதற்கு அவர்களை வாழ்த்துகிறேன் என்றார் மோடி.

 

அதைத் தொடர்ந்து, ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் இருந்து அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் பேசியதாவது:

கூடங்குளம் அணுமின் நிலையம், சாதாரணவசதிகளுடன் மேம்போக்காகக் கட்டப்படவில்லை. அது, ரஷியாவின் அதிநவீன தொழில்நுட்பவசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அணுசக்தி தொழில்நுட்பத்தில் உலகளவில் ரஷியா முன்னணியில் இருப்பது யாவரும்அறிந்ததே. எங்களது தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...