காங்கிரஸ்கட்சி சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறது

காஷ்மீரிலுள்ள பா.ஜ.க கூட்டணி அரசை அகற்ற காங்கிரஸ் திட்டமிடுவதாக மத்திய செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாறிமாறி பேசிவருவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் குறித்த காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியவர், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் காஷ்மீர் பற்றி ஒருகருத்தை தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியோ அது தன்னுடைய கருத்துஇல்லை என மறுப்பு தெரிவிக்கிறது . சல்மான் குர்ஷித் கூறிய கருத்திற்கும் இதேமுறையில் மறுப்பு வெளியிட்டுள்ள காங்கிரஸ், ப.சிதம்பரம் காஷ்மீர் பற்றி கூறியகருத்தையும் கட்சியின் நிலைப்பாடு இல்லை என காங்கிரஸ் தலைமை மறுப்பது முரண்பாடாக இல்லையா என வினவியுள்ளார்.

காங்கிரஸ், பிடிபி மற்றும் தேசியஜனநாக கட்சி சேர்ந்து புதிய ஆட்சியமைக்க வேண்டும் என முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளதை சுட்டிக் காட்டிய அவர், காஷ்மீரில் ஏற்கனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருப்பதாக குறிப்பிட்டார். அதை அகற்றுவதுதான் காங்கிரஸ் கட்சியின் திட்டமா என்றும் வெங்கய்ய நாயுடு வினவியுள்ளார். மேலும் தம்மை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி காஷ்மீர் விவகாரத்தில் பல முரண்பட்ட கருத்துக்களை கொண்டுள்ளதாக சாடினார். காஷ்மீர் பிரச்சனையில் காங்கிரஸ்கட்சி சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதாக வெங்கய்ய நாயுடு     புகார்தெரிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்சனையில் பிண்ணனியில் பாகிஸ்தான் இருப்பது கூடவா காங்கிரஸ் கட்சிக்குதெரியாது என கேள்வி எழுப்பிய அவர், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறும் காங்கிரஸ் தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.