காங்கிரஸ்கட்சி சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறது

காஷ்மீரிலுள்ள பா.ஜ.க கூட்டணி அரசை அகற்ற காங்கிரஸ் திட்டமிடுவதாக மத்திய செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாறிமாறி பேசிவருவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் குறித்த காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியவர், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் காஷ்மீர் பற்றி ஒருகருத்தை தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியோ அது தன்னுடைய கருத்துஇல்லை என மறுப்பு தெரிவிக்கிறது . சல்மான் குர்ஷித் கூறிய கருத்திற்கும் இதேமுறையில் மறுப்பு வெளியிட்டுள்ள காங்கிரஸ், ப.சிதம்பரம் காஷ்மீர் பற்றி கூறியகருத்தையும் கட்சியின் நிலைப்பாடு இல்லை என காங்கிரஸ் தலைமை மறுப்பது முரண்பாடாக இல்லையா என வினவியுள்ளார்.

காங்கிரஸ், பிடிபி மற்றும் தேசியஜனநாக கட்சி சேர்ந்து புதிய ஆட்சியமைக்க வேண்டும் என முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளதை சுட்டிக் காட்டிய அவர், காஷ்மீரில் ஏற்கனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருப்பதாக குறிப்பிட்டார். அதை அகற்றுவதுதான் காங்கிரஸ் கட்சியின் திட்டமா என்றும் வெங்கய்ய நாயுடு வினவியுள்ளார். மேலும் தம்மை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி காஷ்மீர் விவகாரத்தில் பல முரண்பட்ட கருத்துக்களை கொண்டுள்ளதாக சாடினார். காஷ்மீர் பிரச்சனையில் காங்கிரஸ்கட்சி சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதாக வெங்கய்ய நாயுடு     புகார்தெரிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்சனையில் பிண்ணனியில் பாகிஸ்தான் இருப்பது கூடவா காங்கிரஸ் கட்சிக்குதெரியாது என கேள்வி எழுப்பிய அவர், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறும் காங்கிரஸ் தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...