ரயில்வே துறைக்கு இனி தனிபட்ஜெட் இல்லை

பொதுபட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல்செய்யப்படும் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு, மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதைதொடர்ந்து, ரயில்வே துறைக்கு இனி தனிபட்ஜெட் தாக்கல் செய்யப்படமாட்டாது.

கடந்த 1924-ம் ஆண்டு முதல் ரயில்வேக்கு என தனிபட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி கால மரபு இது . ஆண்டுதோறும், பொதுபட்ஜெட்டுக்கு முன்னதாக ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதும் வழக்கமாக தொடர்ந்துவருகிறது. கடந்த பாஜக. ஆட்சியிலேயே ரயில்வே பட்ஜெட்டை பொதுபட்ஜெட்டுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், நிறைவேற்ற முடியவில்லை.

அதன் பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றதேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்ததும், மீண்டும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. இதுதொடர்பாக ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க 5 பேர் கொண்ட குழுவை மத்திய நிதியமைச்சகம் நியமித்தது.

 இந்தக்குழு சமீபத்தில் அளித்த அறிக்கையில், ரயில்வே பட்ஜெட்டை பொதுபட்ஜெட்டுடன் இணைக்கலாம் என்று பரிந்துரைசெய்தது. இதனை மத்திய நிதியமைச்சகம் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில், ரயில்வே பட்ஜெட்டை பொதுபட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல்செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைதொடர்ந்து, வருகின்ற நிதியாண்டு முதல் பொதுபட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைத்து தாக்கல்செய்யப்பட உள்ளது.

அதேபோல், 2017-18-ம் நிதியாண்டு முதல் பொதுபட்ஜெட் பிப்ரவரி 28-ம் தேதிக்கு முன்னதாக தாக்கல்செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதனால், பட்ஜெட் தொடர்பான அனைத்து துறைகளின் பரிந்துரைகளும் வருகின்ற நவம்பர் 15-ம் தேதிக்குள் இறுதிசெய்யப்படும். பிப்ரவரி முதல் வாரத்தில் பொதுபட்ஜெட் இனி தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...