ரயில்வே உள்கட்டமைப்பு பணிகளை துவக்கி வைத்தார்: பிரதமர் மோடி

ஒடிசாவின் ராயகடா ரயில்வே மண்டல கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியதுடன், தெலுங்கானாவில் சர்லாபள்ளி ரயில் நிலையம், ஜம்மு ரயில்வே மண்டலத்தையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.

ரயில்வே உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அந்த வரிசையில், ஒடிசாவின் ராயகடா ரயில்வே மண்டல கட்டடத்துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

மேலும், தெலுங்கானாவில் சர்லாபள்ளி ரயில் நிலையம், ஜம்மு ரயில்வே மண்டலத்தையும், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

நம் நாட்டின் ரயில்வே கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி வருகின்றன. 2025ம் ஆண்டு துவக்கத்தில், ‘மெட்ரோ’ ரயில் சேவை, 1,000 கி.மீ., துாரத்தை எட்டியுள்ளன.

இப்போது துவங்கப்பட்டுள்ள இந்த மூன்று புதிய சேவைகள், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ரயில்வேயின் புதிய மைல்கல்லாக திகழும்.

ரயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

மொத்தம், 50 வழித்தடங்களில், 136 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் நடந்த சோதனை ஓட்டத்தில், வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கி.மீ., வேகத்தை எட்டியுள்ளது.

நம் நாட்டின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.