இதுதான் காங்கிரஸ்கட்சி, தேசத்தின் மீது வைத்திருக்கும் பற்றா?

அன்று ஊழல்செய்த மத்திய அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் போராடின, இன்று ஊழலை ஒழிக்கபோராடும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கண்டனம் தெரிவிக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி சூசகமாகக் கூறியுள்ளார்.

பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதுபற்றி, மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்பு ஆட்சிசெய்த மத்திய அரசு ஊழல்செய்தது. அதனை எதிர்க் கட்சிகள் எதிர்த்தன. ஆனால், இப்போதோ, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சியில் ஊழலையும் கருப்புப்பணத்தையும் ஒழிக்க நடக்கும் போராட்டத்துக்கு எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்று கூறியதாகத் தெரிவித்தார்.

கருப்புப் பணத்தை ஒழிக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதுதான் காங்கிரஸ்கட்சி, தேசத்தின் மீது வைத்திருக்கும் பற்றா? என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

மேலும், பணப்புழக்கத்தைத் தவிர்த்துவிட்டு, டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த் தனைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாட்டுமக்களை வலியுறுத்தியுள்ளதாக ஆனந்த் குமார் கூறினார்.

அதாவது, நாட்டுமக்கள் அனைவரும் தங்களது வாழ்க்கை முறையை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஏற்றவகையில் அமைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுதாகக் கூறினார். இதன்மூலம், ஊழல் மற்றும் கருப்புப்பணம் ஒழியும் என்று தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...