ஆமணக்கின் மருத்துவக் குணம்

 ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் தணலில் காட்டி பால் வற்றிய பெண்களின் தனங்களில் வைத்துக் கட்டி வந்தால் பால் சுரப்பு நன்கு உண்டாகும்.

இவ்விலைகளைச் சிறிதாக அறிந்து, சிற்றாமணக்கு நெய்விட்டு வதக்கி, பொறுக்கும் சூட்டுடன், வேதனையுடன் கூடிய கீல்வாதங்களுக்கு, வாத இரத்த வீக்கங்களுக்கும் ஒற்றடமிடலாம். இதனால் வேதனை தணியும்.

சிற்றாமணக்கு இலையும், கீழாநெல்லி இலையையும் சமமாக எடுத்து அரைத்துச் சிறு எலுமிச்சங்காயளவு, மூன்று நாளைக்கு காலையில் மட்டும் கொடுத்து நாளாம் நாள் 3,4 முறை வயிறு போகுமாறு சிவதை சூரணம் கொடுக்க காமாலை நீங்கும்.

மலக்கட்டும் வயிற்று வலியுமுள்ள காலத்திலேனும் சூதக்கட்டு அல்லது சூதகத் தடையுடன், அடிவயிற்றில் வலி காணும் போதேனும் அடிவயிற்றின் மீது சிற்றாமணக்கு இலைகளை வதக்கிப் போட்டுவர அவைகள் யாவும் குணப்படும்.

சிறு முத்துக்களிளிருந்து எடுக்கப்படும் நெய்க்குச் சிற்றாமணக்கு நெய் (அ) சிற்றாமணக்கு எண்ணெய்.

பெரு முத்துக்களிளிருந்து எடுக்கும்  எண்ணெய் பெருமுத்துக்கொட்டை எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் என்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

 

இந்த இலையை நன்கு குறுக அறிந்து சிற்றாமணக்கு நெய்விட்டு நன்றாக வதக்கி ஒரு துணியில் வைத்து முடிந்து ஆசனத்தில் மெல்ல ஒத்தடம் கொடுத்து வருவதன் மூலமும், வதக்கிய இலையை ஆசனவாயிலில் வைத்துக் கட்டுவதன் மூலமும், மூலம் சம்பந்தமான நோய்கள் குணமாவதுடன் மூலக் கடுப்பும் நீங்கும்.

இதன் தளிர் இலைகளை எடுத்துச் சிற்றாமணக்கு நெய் தடவி அனலில்வாட்டி வயிற்றில் வைத்துக் கட்டி வந்தால் எந்தவிதமான கடுமையான வயிற்றுவலியாக இருந்தாலும் குணமாகிவிடும்.

ஆமணக்கு நெய் நன்கு மலத்தை இளக்கும் நல்ல மருந்துப் பொருளாகும், பெரியவர்களுக்குப் பசுவின் பாலுடனாவது இஞ்சிச் சாற்றுடனாவது ஏறக்குறைய இரண்டு தேக்கரண்டியளவு கலந்து கொடுக்க வேண்டும். சிறியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் எண்ணெய்யின் அளவைப் பாதிக்குப்பாதியாகக் குறைப்பது நல்லது. இவ்விதம் கொடுத்தால் மலம் நன்கு இளகும், இதைத் தொடர்ந்து கொடுத்து வரக்கூடாது. எப்போதாவது ஒருமுறைதான் கொடுக்க வேண்டும். மூலரோகத்தால் துன்பப்படுபவர்களுக்கும், பிரசவித்த பெண்களுக்கும் கொடுத்து வர மலக்கட்டைப் போக்கலாம். ஆக, ஆமணக்கும் ஒரு நல்ல மருந்து பொருளாகத் திகழ்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...