ஆமணக்கின் மருத்துவக் குணம்

 ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் தணலில் காட்டி பால் வற்றிய பெண்களின் தனங்களில் வைத்துக் கட்டி வந்தால் பால் சுரப்பு நன்கு உண்டாகும்.

இவ்விலைகளைச் சிறிதாக அறிந்து, சிற்றாமணக்கு நெய்விட்டு வதக்கி, பொறுக்கும் சூட்டுடன், வேதனையுடன் கூடிய கீல்வாதங்களுக்கு, வாத இரத்த வீக்கங்களுக்கும் ஒற்றடமிடலாம். இதனால் வேதனை தணியும்.

சிற்றாமணக்கு இலையும், கீழாநெல்லி இலையையும் சமமாக எடுத்து அரைத்துச் சிறு எலுமிச்சங்காயளவு, மூன்று நாளைக்கு காலையில் மட்டும் கொடுத்து நாளாம் நாள் 3,4 முறை வயிறு போகுமாறு சிவதை சூரணம் கொடுக்க காமாலை நீங்கும்.

மலக்கட்டும் வயிற்று வலியுமுள்ள காலத்திலேனும் சூதக்கட்டு அல்லது சூதகத் தடையுடன், அடிவயிற்றில் வலி காணும் போதேனும் அடிவயிற்றின் மீது சிற்றாமணக்கு இலைகளை வதக்கிப் போட்டுவர அவைகள் யாவும் குணப்படும்.

சிறு முத்துக்களிளிருந்து எடுக்கப்படும் நெய்க்குச் சிற்றாமணக்கு நெய் (அ) சிற்றாமணக்கு எண்ணெய்.

பெரு முத்துக்களிளிருந்து எடுக்கும்  எண்ணெய் பெருமுத்துக்கொட்டை எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் என்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

 

இந்த இலையை நன்கு குறுக அறிந்து சிற்றாமணக்கு நெய்விட்டு நன்றாக வதக்கி ஒரு துணியில் வைத்து முடிந்து ஆசனத்தில் மெல்ல ஒத்தடம் கொடுத்து வருவதன் மூலமும், வதக்கிய இலையை ஆசனவாயிலில் வைத்துக் கட்டுவதன் மூலமும், மூலம் சம்பந்தமான நோய்கள் குணமாவதுடன் மூலக் கடுப்பும் நீங்கும்.

இதன் தளிர் இலைகளை எடுத்துச் சிற்றாமணக்கு நெய் தடவி அனலில்வாட்டி வயிற்றில் வைத்துக் கட்டி வந்தால் எந்தவிதமான கடுமையான வயிற்றுவலியாக இருந்தாலும் குணமாகிவிடும்.

ஆமணக்கு நெய் நன்கு மலத்தை இளக்கும் நல்ல மருந்துப் பொருளாகும், பெரியவர்களுக்குப் பசுவின் பாலுடனாவது இஞ்சிச் சாற்றுடனாவது ஏறக்குறைய இரண்டு தேக்கரண்டியளவு கலந்து கொடுக்க வேண்டும். சிறியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் எண்ணெய்யின் அளவைப் பாதிக்குப்பாதியாகக் குறைப்பது நல்லது. இவ்விதம் கொடுத்தால் மலம் நன்கு இளகும், இதைத் தொடர்ந்து கொடுத்து வரக்கூடாது. எப்போதாவது ஒருமுறைதான் கொடுக்க வேண்டும். மூலரோகத்தால் துன்பப்படுபவர்களுக்கும், பிரசவித்த பெண்களுக்கும் கொடுத்து வர மலக்கட்டைப் போக்கலாம். ஆக, ஆமணக்கும் ஒரு நல்ல மருந்து பொருளாகத் திகழ்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...