சிலர் எல்லா விஷயங்களையும் அரசியல் ஆக்குகின்றனர்

“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து எதிர்க் கட்சிகள் பிழையான தகவல்களைத் தந்து, அவையை தவறாக வழிநடத்துகின்றன” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக நாடாளுன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, “எத்தனை மருத்துவக்கல்லூரிகள் முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் செயல் படுகின்றன? பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய எத்தனை மருத்துவ கல்லூரிகள் இன்னும் தொடங்கப் படாமல் உள்ளன?” என்று கேள்விஎழுப்பினார். அப்போது, “மதுரையில் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படவில்லை” என்று திமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “மதுரை எய்ம்ஸில் மருத்துவபடிப்புகள் நடைபெற்று வருகின்றன. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.1,900 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவனை தொடர்பாக எதிர்க் கட்சிகள் பிழையான தகவல்களைக் கூறி அவையை தவறாக வழிநடத்து கின்றன.

சிலர் எல்லா விஷயங்களையும் அரசியல் ஆக்குகின்றனர். அவர்கள் ஏன்இவ்வாறு செய்கிறார்கள் என்று எனக்கு தெரியும். நான் உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள், நோயாளிகள் இல்லாத மருத்துவக்கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளேன். அதற்கான எதிர் வினைதான் இது. இது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளை மோடி அரசு அனுமதிக்காது. இது போன்ற மருத்துவ கல்லூரிகளுக்கு எதிராக நாங்கள் எங்களது நடவடிக்கைகளை தொடர்வோம்”.

“பிரதமர் மோடி தலைமையிலான அரசு, நாட்டில் மருத்துவ படிப்புகளை விரிவாக்கம்செய்ய நடவடிக்கையை எடுத்துவருகிறது. இதனால், மாணவர்கள் வெளிநாடுசென்று மருத்துவம் படிக்க வேண்டிய தேவை இல்லை. கடந்த 2014-ம் ஆண்டு நாட்டில் மொத்தம் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. தற்போது அவை 657 ஆக அதிகரித்துள்ளது.

மாநில அரசு அல்லது தனியார் அமைப்புகள் மருத்துவக்கல்லூரி தொடங்கு வதற்கான விதிகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 37 மருத்துவக் கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இன்னும் 89 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...