சிலர் எல்லா விஷயங்களையும் அரசியல் ஆக்குகின்றனர்

“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து எதிர்க் கட்சிகள் பிழையான தகவல்களைத் தந்து, அவையை தவறாக வழிநடத்துகின்றன” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக நாடாளுன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, “எத்தனை மருத்துவக்கல்லூரிகள் முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் செயல் படுகின்றன? பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய எத்தனை மருத்துவ கல்லூரிகள் இன்னும் தொடங்கப் படாமல் உள்ளன?” என்று கேள்விஎழுப்பினார். அப்போது, “மதுரையில் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படவில்லை” என்று திமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “மதுரை எய்ம்ஸில் மருத்துவபடிப்புகள் நடைபெற்று வருகின்றன. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.1,900 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவனை தொடர்பாக எதிர்க் கட்சிகள் பிழையான தகவல்களைக் கூறி அவையை தவறாக வழிநடத்து கின்றன.

சிலர் எல்லா விஷயங்களையும் அரசியல் ஆக்குகின்றனர். அவர்கள் ஏன்இவ்வாறு செய்கிறார்கள் என்று எனக்கு தெரியும். நான் உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள், நோயாளிகள் இல்லாத மருத்துவக்கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளேன். அதற்கான எதிர் வினைதான் இது. இது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளை மோடி அரசு அனுமதிக்காது. இது போன்ற மருத்துவ கல்லூரிகளுக்கு எதிராக நாங்கள் எங்களது நடவடிக்கைகளை தொடர்வோம்”.

“பிரதமர் மோடி தலைமையிலான அரசு, நாட்டில் மருத்துவ படிப்புகளை விரிவாக்கம்செய்ய நடவடிக்கையை எடுத்துவருகிறது. இதனால், மாணவர்கள் வெளிநாடுசென்று மருத்துவம் படிக்க வேண்டிய தேவை இல்லை. கடந்த 2014-ம் ஆண்டு நாட்டில் மொத்தம் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. தற்போது அவை 657 ஆக அதிகரித்துள்ளது.

மாநில அரசு அல்லது தனியார் அமைப்புகள் மருத்துவக்கல்லூரி தொடங்கு வதற்கான விதிகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 37 மருத்துவக் கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இன்னும் 89 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...