இந்த சோதனையான நேரத்தில் துணை நின்ற 100 கோடி இந்தியர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன்

பிரதமர் நரேந்திரமோடி டிவி வாயிலாக இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், வங்கியிலும், ஏடிஎம்களிலும் பணம் எடுக்க மக்கள் பட்டகஷ்டங்களுக்கு நன்றி தெரிவித்து பெருமிதம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

நாட்டு மக்கள் ஊழலுக்கு எதிரான மனநிலையில் உள்ளார்கள். தீமையை அழிக்க மக்கள் சபதம் ஏற்றால் விளைவுநன்றாக இருக்கும் என்பதற்கு நமது நாடு உதாரணம். நவம்பருக்குபின் புதிய சவால்கள் மக்களுக்கு காத்திருந்தன. ஆனால் ஊழல் பிரச்சனைகளை அகற்ற போராடுகிறோம் என்ற உணர்வு அனை வரையும் ஒன்றிணைத்தது.

ஊழலை ஒழிக்கவும் ஏழைகள் நலம்பெறவுமே பண மதிப்பிழப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், நேர்மை மரபு காப்பாற்றப் பட்டுள்ளது. ஊழலை ஒழிக்கும் மனநிலையில் மக்கள் உள்ளனர். கறுப்புபணம், கள்ளச்சந்தை, விலை வாசியால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

கறுப்புபண ஒழிப்பால் நீண்ட நாட்களுக்கு பயன் கிடைக்கும். எனவேதான், பணமதிப்பிழப்புக்கு நாட்டுமக்கள் ஆதரவு தந்து வருகிறார்கள். பணப் பற்றாக் குறை கிராமங்களில் விரைவில் சரி செய்யப்படும். வங்கிகள் விரைவில் இயல்பு நிலைக்கு வரும்

பணபரிமாற்றத்தை மக்கள் நிறுத்த வேண்டும். டிஜிட்டலுக்கு மாறவேண்டும். மக்களின் பணம் வங்கிக்கு வந்தால் நாட்டுக்கு வளர்ச்சிகிடைக்கும். காமராஜர் போன்ற தலைவர்கள் இருந்திருந்தால் மக்களை பாராட்டுவர். ஏழைகளை முன்னேற்ற இதுபோன்ற நடவடிக்கைதேவை. இந்தியர்கள் தியாகமும், பொறுமையும் உலகிற்கே ஒரு உதாரணம்.

 

பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் தவறுசெய்த வங்கி அதிகாரிகளை நாங்கள் விட்டுவைக்க மாட்டோம். சாமானிய மக்களுக்கும் அதிகாரம் கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தான் போராடி வருகிறோம்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர். அரசு கொண்டுவந்த வருமான ஒப்புதல் திட்டத்தில் ரூ10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளது என மொத்தம் 24 லட்சம்பேர்தான் ஒப்புக் கொள்கின்றனர். தற்பொழுது அரசு எடுத்த நடவடிக்கை தேசத்தின் வருங் காலத்துக்கு மிகவும் பயன்தரும்.

இந்த சோதனையான நேரத்தில் துணை நின்ற 100 கோடி இந்தியர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்போது பல்வேறு சலுகைகளை அறிவித்தார். அதில் முக்கியத்துவம் வாய்ந் சில அம்சங்கள்:

*மூத்த குடிமக்கள் ரூ.7.5 லட்சம் 10 ஆண்டுகளுக்கு டிபாசிட்செய்தால் 8 சதவீதம் வட்டிவழங்கப்படும்
 
*கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால செலவுக்காக உதவும் வகையில், மத்திய அரசு சார்பில் ரூ.6000 உதவித் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்இந்த திட்டம் நாடு முழுக்க முதல் கட்டமாக 650 மாவட்டங்களில் கொண்டுவரப்படும்.
 
*சிறு குறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன்வழங்கப்படும். சிறு வணிகர்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும்.
 
*சொந்த வீடுகட்டுபவர்களுக்கு 9 லட்சம் ரூபாய்வரை 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும். ரூ.12 லட்சம் வரை கடன்பெறுவோருக்கு 3% வட்டி விலக்கு அளிக்கப்படும்.
 
*விவசாயிகளின் குறிப்பிட்ட சிலகடன்களின் 60 நாட்களுக்கான வட்டியை அரசே ஏற்கும். வங்கிக்கடன் பெற்று விதைக்கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 60 சதவீதம் வரிச்சலுகை அளிக்கப்படும்.
 
*சிறிய வர்த்தகத்திற்கான ரொக்க கடன்வரம்பு 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்படும்.

.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...