மஹா கும்பமேளாவின் வெற்றி அனைவருக்கும் பங்கு ; பிரதமர் மோடி உரை

மஹா கும்பமேளாவின் வெற்றியில் அனைவருடைய பங்கும் அடங்கி இருக்கிறது என லோக்சபாவில் பிரதமர் மோடி பேசினார்.

மஹா கும்பமேளா நிகழ்ச்சி குறித்து லோக்சபாவில் பிரதமர் மோடி பேசியதாவது: பிரயாக்ராஜில் நடந்த மஹா கும்பமேளாவின் வெற்றிக்கு பங்களித்த கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். கும்ப மேளாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த வெற்றியில் அனைவரின் பங்கும் அடங்கி இருக்கிறது. அரசு, சமுதாயம், மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என அனைவரின் பங்கும் உள்ளது.

கங்கா தேவியை பூமிக்கு கொண்டு வருவதற்கு பகீரத மன்னன் முயற்சி மேற்கொண்டது நாம் எல்லோருக்கும் நன்கு தெரியும். மிகப்பெரிய இலக்குகளை நோக்கிய தேசிய நலனின் அடையாளமாக மஹா கும்பமேளா விளங்கியது. நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சியாக மஹா கும்பமேளா நடைபெற்றது. உத்தர பிரதேச மக்கள் மற்றும் பிரயாக்ராஜ் பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

கடந்தாண்டு அயோத்தியில் ராமரின் பிரம்மாண்ட பிரதிஷ்டை நடைபெற்றது. நமது திறன்கள் குறித்து மக்கள் மனதில் உள்ள சந்தேகங்களுக்கு மஹா கும்பமேளா பதில் அளித்துள்ளது. மஹா கும்பமேளாவின் பிரம்மாண்ட அற்புதத்திற்கு ஒட்டுமொத்த உலகமும் சாட்சியாக விளங்குகிறது. அடுத்த தலைமுறைக்கு இந்த கும்பமேளா ஒரு பெரும் உதாரணமாக திகழும். அது தேசத்திற்கு புதிய திசையும் வழங்கி உள்ளது.

உயர்ந்து வரும் இந்தியாவின் உணர்வுகளை மஹா கும்பமேளா பிரதிபலித்தது. இந்தியாவின் புதிய தலைமுறை, பாரம்பரியங்களையும், நம்பிக்கையையும் பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறது. இந்தியாவின் மகத்துவத்தை கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் பார்த்தது. ஒரு தேசிய உணர்வை கண்டோம். இது புதிய சாதனைகளுக்கு ஊக்கமளிக்கும். இது நமது பலத்தை சந்தேகிப்பவர்களுக்கு பதிலடியை கொடுத்தது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...