நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளியல் போட்டு, புத்தாடைகளை உடுத்தி, குடும்பத்துடன் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

ஹிந்து மக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தளப்பதிவில், ‘இந்தத் தீபாவளி திருநாளில் நாட்டு மக்கள் ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளம் பெற்று வாழ வாழ்த்துகிறேன். லட்சுமி, கணேஷா கடவுள்களின் ஆசிபெற்று, அனைத்து வளமும் பெற வேண்டுகிறேன்,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த பிறகு முதல் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதற்கான மகிழ்ச்சியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். ராமர் கோவில் பக்தர்களின் எண்ணிலடங்கா தியாகம் மற்றும் வேண்டுதலினால், 500 ஆண்டுகளுக்குப் பிறகு புனித நிகழ்வு நடப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், கடவுள் ராமரின் வாழ்க்கையும், அவரது லட்சியங்களும், நாட்டு மக்களுக்கு உத்வேகமாக நீடிக்கும் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

புதுதில்லியில் இந்திய செயற்கை ...

புதுதில்லியில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தார் பிரதமர் புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப் ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது போட்றா வெடிய! இந்தியாவின் கைகளுக்குள் வந்த வங்கதேசம்; வெற்றி ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய பிரதமர் அலுவலகம் ஒரு பார்வை அம்மாடியோவ்! இவ்வளவு பாதுகாப்பா?; ஒரு ஈ, எறும்பு கூட ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...