பாகிஸ்தானை தீவிரவாதநாடாக அறிவித்தால் மட்டுமே, சர்வதேச சமூகத்தில் இருந்து அதனை தனிமைப் படுத்தி, தண்டிக்கமுடியும் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திர சேகர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, மாநிலங்களவையில் தனி நபர் மசோதா ஒன்றை தாக்கல்செய்து பேசிய அவர் மேலும் கூறியதாவது:
ராணுவ ரீதியாக, பாகிஸ்தான்மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. அந்நாட்டுடன் நடந்த அனைத்து போர்களிலும் இந்தியாவே வெற்றிபெற்றுள்ளது. எனினும், காஷ்மீரின் ஒருபகுதியை பாகிஸ்தான் இன்றளவும் ஆக்கிரமிப்பு செய்து வருகிறது.
அந்நாட்டை ராணுவ ரீதியாக தோற்கடிப் பதற்குப் பதிலாக, ராஜாங்க ரீதியாகப் பலபுதிய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவித்து, சர்வதேச சமூகத்தில்இருந்து அதனை தனிமைப்படுத்தவேண்டும். அந்நாட்டிற்குக் கிடைக்கும் அனைத்துப் பொருளாதார உதவிகளும் இதன் மூலமாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.
பாகிஸ்தானை தீவிரவாதநாடாக அறிவிப்பதன் மூலமாக, தெற்காசிய பிராந்தியத்தில் இயங்கும் அனைத்து தீவிரவாத அமைப்புகளையும் முடக்கிடமுடியும் இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.