பாகிஸ்தானை தீவிரவாதநாடாக அறிவித்தால் மட்டுமே சர்வதேச சமூகத்தில் இருந்து அதனை தனிமை படுத்த முடியும்

பாகிஸ்தானை தீவிரவாதநாடாக அறிவித்தால் மட்டுமே, சர்வதேச சமூகத்தில் இருந்து அதனை தனிமைப் படுத்தி, தண்டிக்கமுடியும் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திர சேகர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மாநிலங்களவையில் தனி நபர் மசோதா ஒன்றை தாக்கல்செய்து பேசிய அவர் மேலும் கூறியதாவது:

ராணுவ ரீதியாக, பாகிஸ்தான்மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. அந்நாட்டுடன் நடந்த அனைத்து போர்களிலும் இந்தியாவே வெற்றிபெற்றுள்ளது. எனினும், காஷ்மீரின் ஒருபகுதியை பாகிஸ்தான் இன்றளவும் ஆக்கிரமிப்பு செய்து வருகிறது.


அந்நாட்டை ராணுவ ரீதியாக தோற்கடிப் பதற்குப் பதிலாக, ராஜாங்க ரீதியாகப் பலபுதிய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவித்து, சர்வதேச சமூகத்தில்இருந்து அதனை தனிமைப்படுத்தவேண்டும். அந்நாட்டிற்குக் கிடைக்கும் அனைத்துப் பொருளாதார உதவிகளும் இதன் மூலமாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.

பாகிஸ்தானை தீவிரவாதநாடாக அறிவிப்பதன் மூலமாக, தெற்காசிய பிராந்தியத்தில் இயங்கும் அனைத்து தீவிரவாத அமைப்புகளையும் முடக்கிடமுடியும் இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...