மாணவர்கள் புதிய இந்தியாவை உருவாக்கவேண்டும்

மாணவர்கள் புதிய இந்தியாவை உருவாக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தி உள்ளார்.

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றியதன் 125-வது ஆண்டு தினம் மற்றும் பண்டித தீனதயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கான கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இன்றைய சூழ்நிலையில் எந்த அளவுக்குவளர்ச்சி அடைந்துள்ளது என்பதை வைத்துதான் ஒருநாட்டை உலக நாடுகள் மதிப்பீடு செய்கின்றன. மாறாக, அந்த நாடு 5,000 ஆண்டுகளுக்கு முன்போ, அல்லது ராமர் அல்லது புத்தர்காலத்திலோ எப்படி இருந்தது என்பதை கருத்தில் கொள்வதில்லை.

எனவே, மாணவர்கள் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்காக பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியை மேற்கொள்வதுடன் புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு சுவாமி விவேகானந்தர் ஆதரவாக இருந்தார். அவரது எண்ணப்படியே மத்திய அரசு செயல்பட்டுவருகிறது. மேலும் அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் தூதுவராக விவேகானந்தர் விளங்கினார்.

குறிப்பாக, 125 ஆண்டுகளுக்கு (1893) முன்பு இதே நாளில் (9/11) அமெரிக்காவின் சிகாகோ நகரில் தனது இளம்வயதில் விவேகானந்தர் ஆற்றிய உரை பல்வேறு மதத்தினரின் இதயங்களையும் கவர்ந்தது.

ஆனால் அதே அமெரிக்க மண்ணில் கடந்த 2001-ம் ஆண்டு இதே நாளில் (9/11) உலக வர்த்தக மைய கட்டிடத்தை தீவிரவாதிகள் விமானங்களை மோதி தகர்த்தனர். இதனால் பேரழிவு ஏற்பட்டது. விவேகானந்தரின் உரையை அனைவரும் மறக்காமல் இருந்திருந்தால் இந்த கோரசம்பவம் நடந்திருக்காது.

பொதுமக்கள் அடிக்கடி வந்தேமாதரம் என கூறுகிறார்கள். ஆனால், பெண்களை மதிக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான். அதுபோல, பான்பராக்கை சிலர் வாயில் போட்டு மென்றுவிட்டு தாய் இந்தியா (பூமி) மீது துப்புகின்றனர். எனவே, தூய்மையைப்பற்றி கவலைப்படா தவர்களுக்கும் பெண்களை மதிக்காதவர்களுக்கும் ‘வந்தே மாதரம்’ என்று முழக்கமிட உரிமை இல்லை.

பிறமாநில கலாச்சார நிகழ்ச்சிகளையும் நடத்த கல்லூரி நிர்வாகங்கள் முன்வரவேண்டும். அதாவது ஹரியாணாவில் உள்ள கல்லூரிகளில் தமிழர் பண்டிகைகளையும் பஞ்சாபில் உள்ள கல்லூரிகளில் கேரள பண்டிகைகளையும் கொண்டாட வேண்டும். அதேநேரம் ‘ரோஜா தினத்தைக்’ (காதலர் தினம்) கொண்டாடுவதற்கு நான் எதிரானவன்அல்ல. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்த� ...

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக 'ஆபரேஷன் ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.