நீண்டகாலம் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் இருந்தால் வளர்ச்சிப் பணிகளை பாதிக்கும்

இமாச்சல பிரதேசம், குஜராத் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முறையே ஜனவரி 7 மற்றும் ஜனவரி 22-ல் முடிவடைகிறது. இந்நிலையில் இமாச்சலில் நவம்பர் 9-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. ஆனால் குஜராத் மாநிலத்துக்கு தேர்தல்தேதி அறிவிக்கவில்லை. இந்நிலையில் குஜராத் தேர்தலையொட்டி அந்தமாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சலுகைகள் அறிவிப்பதற்கு வசதியாக தேர்தல் அறிவிப்பை ஆணையம் தாமதப்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி நேற்று கூறியதாவது:

தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வந்துவிடும். குஜராத் தேர்தலை இப்போதே அறிவித்தால் அம்மாநிலம் நீண்டகாலம் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் இருக்கநேரிடும். இது வளர்ச்சிப் பணிகளை பாதிக்கும். இது நியாய மில்லை. நடத்தைவிதிகள் அமலுக்கு வருவதற்கு முன் நிவாரணப் பணிகளை முடிக்க உரியகால அவகாசம் வேண்டும் என குஜராத் அரசு கோரியது.

தேர்தல் அறிவிப்புக்கும் தேர்தல் அறிவிக்கை வெளியாவதற்கும் இடையிலான காலஇடைவெளி 21 நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது என கடந்த 2001-ல் சட்ட அமைச்சகமும் தேர்தல் ஆணையமும் ஓர் உடன் பாட்டுக்கு வந்துள்ளன. 46 நாட்கள் மட்டுமே நடத்தைவிதிகள் அமலில் இருக்கும் என்பதே இதன் அர்த்தமாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...