ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4.50 லட்சம் கோடியை சேமிக்க முடியும் – அண்ணாமலை

”ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் பணத்தை சேமித்து, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 4.50 லட்சம் கோடி ரூபாய் பங்களிக்க முடியும்,” என, மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

பெங்களூரு ஜெயநகரில் உள்ள ஜெயின் பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பாக மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.

பெங்களூரு ஜெயநகரில் உள்ள ஜெயின் பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பாக மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

முதல் லோக்சபா தேர்தல் 1951 – 1952ல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டன. 1952, 1957, 1962, 1967ல் சட்டசபைக்கும், லோக்சபாவுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

கடந்த 1971ல் லோக்சபா ஒரு ஆண்டு முன்னதாகவே கலைக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சி செய்த கேரளாவில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அரசியலமைப்பை மீறி மாநில அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டது.

அவசர நிலையின்போது, காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகள் கலைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

கடந்த காலத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்த ஜனதா கட்சியும் இதை தான் செய்தது. லோக்சபா தேர்தல், இப்போது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக உள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளால் 45 நாட்கள், மேம்பாடு செயல்முறையை தடுக்கிறது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு ஆறு மாதம் நடக்கிறது. ஒரு மாநிலம் தேர்தலுக்காக நிர்வாக செயல்பாடுகளில் குறைந்தது, ஏழு மாதங்களை இழக்கின்றன.

பல தரப்பினருக்கு ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கவும், அதிக ஓட்டு சதவீதம், கூடுதல் மொத்த உள்நாட்டு உற்பத்தி, நிலையான ஜனநாயக அமைப்பு நம்பிக்கைக்காகவும், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்பட்டது.

நிதி ஆயோக் மற்றும் சட்ட ஆணையமும் இந்த திட்டத்தை ஆதரிக்கின்றன. 2019ல் ஒரே நாடு, ஒரே தேர்தலை 16 அரசியல் கட்சிகள் ஆதரித்தன. ஆனால், மூன்று கட்சிகள் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தன.

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதனால் பணத்தை சேமித்து, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 4.50 லட்சம் கோடி ரூபாய் பங்களிக்க முடியும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பொது நலனுக்கான நடவடிக்கையே தவிர, திணிப்பு இல்லை. எல்லாம் எதிர்பார்த்தபடி நடந்தால் 2034ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நர ...

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தால் தி.மு.க., ஆட்சி என்பதே இருக்காது: நயினார் நாகேந்திரன் ஆரூடம் “வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி விட்டால், இனி ...

நாட்டின் பாரம்பரியத்தை பிரதிப ...

நாட்டின்  பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சேனல் தூர்தர்ஷன் – மத்திய இணை அமைச்சர் ''நாட்டின் பொருளாதாரத்தில், படைப்பு பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது,'' என, ...

போதை பொருள் விற்பனையில் தமிழகம ...

போதை பொருள் விற்பனையில்  தமிழகம் முதலிடம் – எ ச் ராஜா தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனையாகிறது. கஞ்சா மூடைகள் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன்ட்ரோல் – நயினார் நாகேந்திரன் ''2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தமிழகத்தில் இருந்து அவுட் ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமு ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...