மொத்தவிற்பனை வருவாய்க்கும் லாபத்துக்கும் வேறுபாடு தெரியாத காங்கிரஸ் துணைத்தலைவர்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு, மொத்தவிற்பனை வருவாய்க்கும் லாபத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை என்று பாஜக தேசியதலைவர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா நடத்திவரும் தொழில் நிறுவனம், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த அபரிதமான வளர்ச்சி அடைந்துள்ளதாக ‘தி வையர்’ என்ற இணையஇதழ் செய்தி வெளியிட்டது.இப்புகாரால் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பதில் அளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஜெய் நிறுவனத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்று அமித் ஷா கூறினார்.

இந்நிலையில் அகமதாபாத்தில் டி.விநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமித் ஷா கூறும்போது, “ஜெய் ஷா சட்டத்துக்கு உட்பட்டு தொழில்செய்து வருகிறார். எனவேதான் செய்தி வெளியிட்ட இணைய இதழுக்கு எதிராக ரூ.100 கோடி இழப்பீடுகேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ராகுல் காந்தி என்ன சொல்கிறார் என்பதுபற்றி நான் கவலைப்படவில்லை. அவர், மொத்த விற்பனை வருவாய்க்கும் லாபத்துக்கும் வேறுபாடு தெரியாதவர்.எனதுமகன் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனவேதான் விசாரணை குறித்த கோரிக்கை எழுவதற்கு முன் அவர் நீதிமன்றம் சென்றுள்ளார்.

எனதுமகன் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் நஷ்டமும் ஏற்படலாம். கடனுக்கும் கடனுக்கான உத்தரவாதத்துக்கும் ராகுல் காந்திக்கு வேறுபாடு தெரியவில்லை. அனைத்து கடன்களும் அடைக்க பட்டுள்ளன. அரசுடன் எந்த வர்த்தகத்திலும் ஜெய்ஷா ஈடுபடவில்லை. எந்தஅரசு நிலத்தையும் அவர் கைப்பற்றவில்லை. ஒப்பந்த தாரர்களுடன் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை” என கூறினார்.

ஜெய்ஷாவுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உதவியதில் எவ்வித தவறும் இல்லை என்றார் அமித் ஷா. இது தொடர்பாக அவர் கூறும் போது, “ஜெய்ஷாவுக்கு அமைச்சர் என்ற முறையில் பியூஷ் கோயல் உதவ வில்லை. பாஜக தலைவர் என்ற முறையில்தான் உதவினார். அவ்வாறு உதவியதில் பியூஷ் கோயல் என்ற குற்றம் செய்துவிட்டார்” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...