கெஜ்ரிவால் மக்களுக்கு என்ன செய்தார் என்பதை வெளிப்படையாக கணக்கு காட்ட வேண்டும் – அமித்ஷா வலியுறுத்தல்

”டில்லியில் முதல்வராக இருந்த கெஜ்ரிவால், மக்களுக்கு செய்தது என்ன என்பதை வெளிப்படையாக அறிவித்து, கணக்கு காட்டியே தீர வேண்டும்,” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வராக பதவி வகித்த போது, டில்லியின் சிவில் லைன் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் வசித்தார். அப்போது இந்த பங்களாவில், 45 கோடி ரூபாய் செலவு செய்து புனரமைப்பு பணிகளை மேற்கொண்டார். அது குறித்து பா.ஜ.,வினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இது குறித்து பிரதமர் மோடி, கெஜ்ரிவால் மீது குற்றம் சாட்டியிருந்தார். தற்போது அவரை தொடர்ந்து அமித் ஷாவும் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து டில்லியில் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
டில்லியில் உள்ள எனது வீட்டிற்கு சிறுவர்கள் சில பேர் வந்து என்னை சந்தித்தனர். அப்போது, நான் அவர்களிடம், டில்லிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் என்ன செய்துள்ளார் என கேட்டேன்.

அதற்கு, அவர்களில் ஒரு சிறுவன், ஒரு பெரிய கண்ணாடி மாளிகை அவருக்கு உள்ளது என்றான். அவர் அரசியலுக்கு வரும்போது, தான் அரசின் பங்களாவோ அல்லது காரோ பயன்படுத்தவில்லை என்று கூறினார். தற்போது,டில்லிவாசிகளின் பணத்தில் பெரிய பங்களாவை உருவாக்கி உள்ளார். கெஜ்ரிவால், நீங்கள் டில்லி மக்களுக்கு கணக்கு காட்டியே தீர வேண்டும்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...