சென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு :

இருநாள் பயணமாக தமிழகம் வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சென்னை விமான நிலையத்தில் கவர்னர், முதல்அமைச்சர், துணை முதல்அமைச்சர் உள்ளிட்டோர் அன்புடன் வரவேற்றனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று தமிழகம் வந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்தியமந்திரி பொன். ராதாகிருஷ்ணன், சட்டசபை சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். அதிகாரிகள் மலர் செண்டுகளை அளித்து அன்புடன் வரவேற்றனர்.வரவேற்புக்கு பின்னர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று சற்று நேரம் ஓய்வெடுத்த அவர், அங்கு சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் உற்பத்தி அலகை தொடங்கி வைத்தார். மராட்டிய மாநில கவர்னரும், தமிழக முன்னாள் (பொறுப்பு) கவர்னருமான வித்யாசாகர் ராவ் எழுதிய நூலை வெளியிட்டார்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சர்வதேச இந்திய அறிவியல் விழாவில் பங்கேற்றார். நாளை லலித் கலா அகடமியில் நடைபெறும் மறைந்த கர்நாடக இசைப பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைக்கும் வெங்கையா நாயுடு, ஆந்திர வர்த்தக சபையின் 90-ம் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி சென்னை மாநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த பட்டுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமு ...

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி கேரளமாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சத்தில் பொது-தனியார் கூட்டாண்மைமாதிரியின் கீழ் ரூ.8 ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை ந ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூறுகிறோம் புனித வெள்ளி குறித்து மோடியின் பதிவு கிறிஸ்தவ மக்களின் புனித நாள்களில் ஒன்றாக கருதப்படும் புனித ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயலாற்ற எலான் மஸ்குடன் பிரதமர் மோடி பேச்சு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீ ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீர்கள் – வங்க தேசத்திற்கு இந்தியா கண்டனம் மேற்குவங்கத்தில் வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த வன்முறை ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் ம ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் மோடிக்கு  நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர் வக்ப் திருத்தச் சட்டத்திற்கு நன்றி தெரிவிக்க தாவூதி போஹ்ரா ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந் ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கண்டனம் காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...