மன்மோகன் சிங் டெல்லி பன்னீர் செல்வம்!

2004 ம் ஆண்டு மன்மோகன் சிங் இந்திய பிரதமராக பதவி ஏற்ற போது புதிய நம்பிக்கை உண்டானது.காரணம் நரசிம்ம ராவ் ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக பெறுப்பேற்ற மன்மோகன் சிங் சிறப்பாக செயல்பட்டார். தாரளமய மற்றும் உலகமயக் கொள்கை அப்போது தான் இந்தியாவில் அறிமுகமானது! அதன் விளைவாக நாம் கண்ட பொருளாதார மாற்றங்கள் மகத்தானவை.

எல்லா கொள்கைகளையும் அரைகுறையாக அமலாக்குவது இந்திய அரசியலின் பலவீனம் அதனால் தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கையின் பின்விளைவாக பணக்காரர்களும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து என்றாலும் பொருளாதார வளர்ச்சி சிறப்பானது! இந்த மாற்றங்களுக்கு மன்மோகன்சிங் முக்கிய காரணம்!


அதனால் 2004 ல் மன்மோகன் சிங் பிரதமராக பதவி ஏற்ற போது புதிய நம்பிக்கை பிறந்தது.
ஆனால் அந்த நம்பிக்கை வேகமாக பொய்த்துப் போது! காரணம் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார் ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் சோனியா காந்தி தனி அமைச்சரவை இயக்கியது.அவரது அமைச்சரவை என் ஜீ ஓ காரர்களை கொண்டதாக இருந்தது.


மன்மோகன் சிங் எடுத்துக்க முயன்ற சீர்திருத்த நடவடிக்கைகளை தடுப்பதாவும் என் ஜீ ஓக்கள் நினைப்பதை திணிப்பதாகவும் சோனியா காந்தி தலைமையிலான குழு இருந்தது.
இந்த போக்கு 2004-2009 ஆட்சியிலேயே துவங்கி விட்டது.2G, நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட ஊழல்களும் அப்போதே அரங்கேறி விட்டன. ஜெயலலிதா முதலமைச்சராக தொடர முடியாமல் போகும் நேரங்களில் ஓ.பன்னீர் செல்வம் பதவியில் அமர்ந்தார்.இது இடைக்கால ஏற்பாடு.
முதலமைச்சராக பன்னீர் செல்வம் இருந்தாலும் ஜெயலலிதா தான் ஆட்சி நடத்தினார்.


இதைப் போல தான் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார்.ஆட்சியை சோனியா காந்தி நடத்தினார்.
ஒரே வித்தியாசம் மன்மோகன் சிங் இடைக்கால ஏற்பாடாக பதவி வகிக்க வில்லை அவ்வளவுதான்! இப்போது நினைத்துப் பார்த்தால் மன்மோகன் சிங்கை பன்னீர்செல்வத்துடன் ஒப்பிட்டு பேசி வந்தது தவறு என்று தோன்றுகிறது. ஆமாம் இந்த ஒப்பீட்டின் மூலம் பன்னீர் செல்வத்தை அவமதித்ததாக தோன்றுகிறது!

நன்றி வசந்தன் பெருமாள்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...