100 நாள் வேலைதிட்டம் தொடர்பாக நேருக்குநேர் விவாதிக்க தயாரா

100 நாள் வேலைதிட்டம் தொடர்பாக தம்முடன் நேருக்குநேர் விவாதிக்க தயாரா என மூத்தகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ்சிங் சவால் விடுத்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்திற்கான (MGNREGA) நிதி ஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு குறைத்து விட்டதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அளித்துள்ள பதில்:

2004-14 ஆண்டு காலத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மற்றும் கடந்த 9 ஆண்டுகாலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் ஆட்சிக் காலத்தின்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் சொத்துக்கள் உருவாக்கம் ஆகிய இரண்டு அம்சங்கள் தொடர்பாக, காங்கிரஸ் மூத்ததலைவர் ராகுல் காந்தியுடன் விவாதிக்கத் தயார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பட்ஜெட் மதிப்பீடு ரூ. 33,000 கோடியைத் தாண்டவில்லை. பெரும்பாலான நிதி ஆண்டுகளில், கிராமப்புற வேலைத் திட்டத்தை மோசமாகச் செயல்படுத்தியதால் அந்தநிதியிலும் குறிப்பிட்டத் தொகை திரும்பி வந்தது.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்ற மே 2014 முதல், ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் மதிப்பீட்டைவிட திருத்தப்பட்ட மதிப்பீடு அதிகமாக உள்ளது. இந்த ஆண்டும் ரூ.73,000 கோடி பட்ஜெட் மதிப்பீடு; ஆனால் அதன் செலவு ஏற்கெனவே ரூ.89,400 கோடியைத் தொட்டுள்ளது,

2019-20 நிதி ஆண்டில் பட்ஜெட் மதிப்பீடு ரூ.60,000 கோடியாகவும், திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.71,000 கோடியாகவும் இருந்தது. 2020-21-ல் ரூ.61,500 கோடி பட்ஜெட் மதிப்பீடு; ஆனால் செலவு ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயர்ந்தது.

கோவிட் தொற்று காரணமாக நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு மக்களின் இடப்பெயர்வு அதிகரித்ததன் காரணமாக அந்த ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்துக்கான ஆரம்ப ஒதுக்கீட்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு செலவு அதிகரித்தது. இதேபோல், 2021-2022-ம் நிதி ஆண்டில் பட்ஜெட் மதிப்படு ரூ.73,000 கோடி; ஆனால் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.99, 117 கோடியைத் தொட்டது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சொத்து உருவாக்கத்தை சரிபார்த்து விவாதிக்க வரவேண்டும். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இத்திட்டத்தில் சொத்து உருவாக்கம் வெறும் 17 சதவிகிதம்தான். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளில், இத்திட்டத்தில் சொத்து உருவாக்கம் ஏற்கெனவே 60 சதவிகிதத்தை தாண்டியுள்ளது. பள்ளங்களைத் தோண்டுவதும் குழிகளை நிரப்புவதும் என இருந்த மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பணிகளையும் அதன் நோக்கத்தையும் பிரதமர் நரேந்திரமோடி மாற்றி அமைத்தார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டச் சட்டத்தின் (MGNREGA) கீழ் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் ஏழைகளுக்கு எதிராக அரசு ஆதாரை தவறாகப் பயன்படுத்துகிறது என்கிறார் ராகுல்காந்தி. இப்படியான திட்டங்களை செயல்படுத்துவதில் முழு வெளிப்படைத் தன்மையை கொண்டு வர வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நோக்கம். இவ்வாறு மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...