முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை பாரதம் என்றென்றும் நினைவில் கொள்ளும் – மோகன் பகவத்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை இந்த பாரதம் என்றென்றும் நினைவில் கொள்ளும் என்று ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும், நிதியமைச்சருமான மன்மோகன் சிங்,92, நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை 9.30 மணியளவில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் மற்றும் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே ஆகியோர் கூட்டாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில்; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு ஒட்டுமொத்த நாட்டையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், அவரை விரும்புபவர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதாரண பின்னணியில் இருந்து வந்தாலும், நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகித்தவர். புகழ்பெற்ற பொருளாதார நிபுணராக இருந்து அவர் நாட்டிற்கு வழங்கிய பங்களிப்பை என்றென்றும் இந்த பாரதம் நினைவில் கொள்ளும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...