கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம் மதத்தினருக்கு புனிதநகராக இருக்கும் ஜெருசலேம் தற்போது இஸ்ரேலின் கட்டுப் பாட்டில் உள்ளது. மத்தியகிழக்கு போரின் போது பாலஸ்தீனிடம் இருந்து ஆக்கிர மிக்கப்பட்ட இந்த நகரை இஸ்ரேலின் தலை நகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.
டிரம்ப்பின் இந்தமுடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமல்லாது பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், துருக்கிபோன்ற ஐரோப்பிய நாடுகளும், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா போன்ற ஆப்ரிக்க நாடுகளும் எதிர்ப்பைபதிவு செய்துள்ளன. ஒட்டுமொத்த அமைதியை குலைக்கும் அறிவிப்பு இது எனபல்வேறு நாட்டு தலைவர்கள் விமர்சித் துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகசெய்தி தொடர்பாளர் ராவீஷ்குமார், “பாலஸ்தீன் மீதான இந்தியாவின் நிலைப்பாடு சுதந்திரமானது மற்றும் நிலையானது. இது நமதுபார்வை மற்றும் ஆர்வத்தை கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் பார்வையை மூன்றாம் நபர்கள் தீர்மானிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.