மூத்த அரசியல் தலைவர் வகேலா காங்கிரஸ் கட்சியில்இருந்து விலகியது குஜராத்தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நரேந்திரசிங் தோமர் கூறியுள்ளார். மத்திய குஜராத் பகுதியில் குறைந்தது 40 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத்சட்டப் பேரவைக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 9-ஆம் தேதி 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், அடுத்தகட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரபிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் என தேசியத் தலைவர்கள் அனைவரும் அங்கு முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மத்திய குஜராத்தைப் பொருத்தவரை 61 தொகுதிகள் உள்ளன. அங்கு காங்கிரஸ் – பாஜக இடையே கடும்போட்டி நிலவுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப்பகுதியில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சியே மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என்றும் கூறப் படுகிறது. மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வகேலாவுக்கு மத்திய குஜராத்தில் செல்வாக்கு அதிகமாக உள்ளது. இந்நிலையில், அவர் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக் கட்சி தொடங்கினார். காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் இந்தமுடிவை எடுத்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர், 'வகேலா காங்கிரஸில் இருந்து விலகியது தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும்' என்றார். மேலும், மத்திய குஜராத்தில் இம்முறை அதிக இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும் அவர் கூறினார்.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.