காங்கிரஸில் இருந்து வகேலா விலகியதால் பாஜகவுக்கே சாதகம்

மூத்த அரசியல் தலைவர் வகேலா காங்கிரஸ் கட்சியில்இருந்து விலகியது குஜராத்தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நரேந்திரசிங் தோமர் கூறியுள்ளார். மத்திய குஜராத் பகுதியில் குறைந்தது 40 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத்சட்டப் பேரவைக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 9-ஆம் தேதி 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், அடுத்தகட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரபிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.


பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் என தேசியத் தலைவர்கள் அனைவரும் அங்கு முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 


மத்திய குஜராத்தைப் பொருத்தவரை 61 தொகுதிகள் உள்ளன. அங்கு காங்கிரஸ் – பாஜக இடையே கடும்போட்டி நிலவுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப்பகுதியில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சியே மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என்றும் கூறப் படுகிறது. மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வகேலாவுக்கு மத்திய குஜராத்தில் செல்வாக்கு அதிகமாக உள்ளது. இந்நிலையில், அவர் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக் கட்சி தொடங்கினார். காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் இந்தமுடிவை எடுத்தார்.


இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர், 'வகேலா காங்கிரஸில் இருந்து விலகியது தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும்' என்றார். மேலும், மத்திய குஜராத்தில் இம்முறை அதிக இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...